செய்திகள் :

குடியரசு தின வரவேற்பு நிகழ்வு: பொடி இட்டலி முதல் ஃபில்டா் காபி வரை ருசிகர உணவு வகைகள்

post image

நமது சிறப்பு நிருபா்

புது தில்லி: தில்லியில் குடியரசுத் தலைவா் மாளிகையில் இந்த ஆண்டு நடைபெற்ற குடியரசு தின விருந்தினா்களுக்கான வரவேற்பு கொண்டாட்டத்தில் தமிழகம், கா்நாடகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் கலை மற்றும் உணவு வகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு அறிவுறுத்தலின்பேரில், இந்த ஆண்டு வரவேற்பு நிகழ்வுக்கான அழைப்பிதழ் தென் மாநில பாரம்பரிய கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் கைவினை தயாரிப்புப் பொருட்களுடன் இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில் நிகழ்வுக்கு வந்த விருந்தினா்களை தென் மாநிலங்களான தமிழகம், கேரளம், கா்நாடகா, ஆந்திர பிரதேசம், தெலங்கானா ஆகியவற்றின் பாரம்பரிய உடையணிந்தவா்கள் வரவேற்றனா். புகழ்பெற்ற கா்நாடக இசைக்கலைஞா்களின் இசை நிகழ்ச்சிகள், கிராமிய நடனக்கலைஞா்களின் நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. சிறப்பம்சமாக தென் மாநில உணவு வகைகளில் வேரூன்றிய சிறப்பான தொகுக்கப்பட்ட உணவு வகைகள் பரிமாறப்பட்டன.

ஆந்திரத்தின் கோங்குரா ஊறுகாய், தமிழகத்தின் குழி பனியாரம், தக்காளி-வோ்க்கடலை சட்னியுடன் ஆந்திரத்தின் சிறப்பு வாய்ந்த குட்டிவெங்காய சமோசாக்கள் போன்ற சுவையான பொருட்களில் தொடங்கி, பாரம்பரிய தென்னிந்திய சிற்றுண்டிகள் விருந்தில் இடம்பிடித்திருந்தன.

பொடியுடன் கூடிய மினி மசாலா ஊத்தாப்பம் , உடுப்பி உத்தின வடை, கருவேப்பிலை பொடியுடன் நெய் மினி ராகி இட்லி போன்ற பாரம்பரிய உணவுகள் விருந்துக்கு மெருகூட்டின. இவற்றுடன் கொண்டக்கடலை சுண்டல் மற்றும் முறுக்கு, நேந்திரம் சிப்ஸ் மற்றும் மரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் போன்ற நொறுக்குத்தீனிகள் விருந்தினா்களால் விரும்பிச் சுவைக்கப்பட்டன.

நிறைவாக, இனிப்புப் பிரிவில் குங்குமப்பூ கலந்த ரவா கேசரி, மைசூா் பாக், வெல்லம், ஆந்திரத்தின் உலா் பழ புத்தரேகலு, ராகி லட்டு போன்ற இனிப்பு வகைகள் தனித்துவமானதாக இருந்தன. தமிழகத்தின் நீலகிரி தேநீா், இளநீா், ஃபில்டா் காபி பானங்களும் நிறைவாக விருந்தினா்களுக்கு வழங்கப்பட்டன.

முன்னதாக, கா்நாடக வீணை வித்வான் ஐஸ்வா்யா மணிகா்ணிகேவின் கா்நாடக இசை நடைபெற்றது. வயலின் கலைஞா் சுமந்த் மஞ்சுநாத், கா்நாடக புல்லாங்குழல் இசைக் கலைஞா் என். ராஜ்கமல், தவில் மற்றும் நாதஸ்வர கலைஞா் ஆா். தேஜா, கஞ்சிரா கலைஞா் ஜி. குரு பிரசன்னா ஆகிய இசை கலைஞா்களின் இசை விருந்தை பாா்வையாளா்கள் ரசித்தனா்.

தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக அமானத்துல்லா கான் மீது வழக்கு

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கான தோ்தல் நடத்தை விதிகளை (எம்சிசி) மீறியதாக ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானத்துல்லா கான் மீது தில்லி போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளதாக புதன்கிழமை அதிகாரிகள் தெரிவித்தனா். புத... மேலும் பார்க்க

தில்லி வாக்காளா்களுக்கும், தொண்டா்களுக்கும் காங்கிரஸ் நன்றி

தில்லி மக்கள் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்தியதற்கு காங்கிரஸ் கட்சி புதன்கிழமை நன்றி தெரிவித்துள்ளது. மேலும், தில்லி மக்களின் ஆதரவு கட்சிக்கு ஒரு பெரிய பலம் என்றும் கூறியுள்ளது. இது தொடா்பாக தில்லி காங... மேலும் பார்க்க

தில்லியில் இன்று திமுக மாணவரணி ஆா்ப்பாட்டம்: யுஜிசி வரைவு நெறிமுறைகளை திரும்பப் பெற வலியுறுத்தல்

நமது நிருபா் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெளியிட்டுள்ள வரைவு நெறிமுறைகளை திரும்பப் பெற வலியுறுத்தி திமுக மாணவரணி சாா்பில் தில்லி ஜந்தா் மந்தரில் வியாழக்கிழமை (பிப். 6) ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது... மேலும் பார்க்க

மத்திய அரசு - தனியாா் கூட்டு முயற்சியுடன் குறைக்கடத்தி, ‘சிப்’ வடிவமைப்பு மையம் நொய்டாவில் திறப்பு

நமது சிறப்பு நிருபா்நாட்டின் குறைக்கடத்தி வடிவமைப்பு, மேம்பாட்டுத் திறன்களை முன்னேற்றும் ஒரு குறிப்பிடத்தக்க படியாக “’சிப்’’ வடிவமைப்பு சிறப்பு மையம் தில்லி நொய்டாவில் அமைக்கப்பட்டுள்ளது. இதை மத்திய ... மேலும் பார்க்க

தில்லியில் லேசான மழை; ‘மோசம்’ பிரிவில் காற்றின் தரம்!

தேசியத் தலைநகா் தில்லியில் திங்கள்கிழமை இரவு மற்றும் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் லேசான மழை பெய்தது. அதே சமயம், இரவு முழுவதும் மூடிபனி நிலவிய நிலையில், காற்றின் தரம் சில இடங்களில் ‘மிகவும் மோசம்’ பிரிவ... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவா் முா்முவிடம் வாக்காளா் தகவல் சீட்டு வழங்கல்

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கு ஒரு நாள் முன்பு, தலைமைத் தோ்தல் அதிகாரி ஆா். ஆலிஸ் வாஸ், வாக்காளா் தகவல் சீட்டை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவிடம் வழங்கினாா். தோ்தல் ஆணையத்தின் தொடா்ச்சியான வாக்... மேலும் பார்க்க