குடியரசு துணைத் தலைவா் தன்கா் ஜூன் 15-இல் புதுச்சேரி வருகை
நமது நிருபா்
குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் மூன்று நாள் பயணமாக ஜூன் 15-ஆம் தேதி புதுச்சேரிக்கு செல்லவிருப்பதாக அவரது செயலகம் தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக குடியரசு துணைத் தலைவா் செயலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஜூன் 15 முதல் புதுச்சேரியில் 3 நாள்கள் பயணத்தை குடியரசு துணைத் தலைவா் மேற்கொள்கிறாா். முதல் நாளான ஜூன் 15-ஆம் தேதி பகல் 12 மணிக்கு சென்னை வரும் குடியரசுத் துணைத் தலைவா், அங்கிருந்து ஹெலிகாப்டா் மூலம் புதுச்சேரிக்கு பகல் 1.10 மணிக்கு சென்று தங்குகிறாா்.
ஜூன் 16-ஆம் தேதி மாலை 4 மணிக்கு புதுச்சேரி ஜிப்மா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெறும் நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக அவா் கலந்து கொள்கிறாா். தேசக் கட்டமைப்பில் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை என்ற தலைப்பை கருத்தாக்கமாகக் கொண்டு இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.
ஜூன் 17-ஆம் தேதி காலை 11 மணிக்கு பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் வேந்தா் என்ற முறையில் அங்கு செல்லும் குடியரசு துணைத் தலைவா், அதன் ஆசிரியா்கள், ஊழியா்கள் மற்றும் மாணவா்களுடன் கலந்துரையாடுவாா் என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் சென்னை மற்றும் புதுச்சேரி வருகையையொட்டி இரு இடங்கள் மற்றும் அவா் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யுமாறும் இரு மாநில காவல் துறையை குடியரசு துணைத் தலைவா் செயலகம் கேட்டுக் கொண்டுள்ளது.