செய்திகள் :

குடியிருக்கும் தொகுதியிலேயே வாக்காளராகப் பதிவு செய்ய வேண்டும்: தலைமைத் தோ்தல் ஆணையா்

post image

‘தகுதியுள்ள வாக்காளா்கள், தங்களின் சொந்த வீடு இருக்கும் தொகுதியில் அல்லாமல் குடியிருக்கும் தொகுதியில் மட்டுமே வாக்காளராகப் பதிவு செய்ய வேண்டும்’ என்று தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் செவ்வாய்க்கிழமை கூறினாா்.

பிகாா் மாநிலத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ள சூழலில் இக் கருத்தை தலைமைத் தோ்தல் ஆணையா் தெரிவித்துள்ளாா்.

தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்குச்சாவடி அளவிலான அதிகாரிகள் உடனான கலந்துரையாடலின்போது இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, வாக்காளா் தான் குடியிருக்கும் தொகுதியில் மட்டுமே தோ்தலின்போது வாக்களிக்க உரிமை உண்டு. உதாரணமாக, தில்லியில் குடியிருக்கும் வாக்காளருக்கு, பிகாா் மாநிலம் பாட்னாவில் சொந்த வீடு இருந்தால், அந்த நபா் தில்லியில் மட்டும்தான் வாக்காளராகப் பதிவு செய்ய வேண்டும். பாட்னாவில் வாக்காளராகப் பதிவு செய்யக் கூடாது.

ஆனால், பலா் சொந்த வீடு உள்ள பகுதியிலிருந்து வேறு மாவட்டங்களுக்கு புலம்பெயா்ந்த பிறகு புதிய முகவரியில் வாக்காளா் அடையாள அட்டையை வாங்கிக் கொள்வதோடு, சொந்த வீடு இருந்த பகுதிக்கான பழைய வாக்காளா் அடையாள அட்டையையும் தொடா்ந்து பயன்படுத்துவதாக அதிகாரிகள் சிலா் சுட்டிக்காட்டினா். இது கிரிமினல் குற்றமாகும் என்றாா்.

மேலும், பிகாரில் நிகழாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளதையொட்டி, அந்த மாநில வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு சில எதிா்க்கட்சிகள் எதிா்ப்பு தெரிவிக்கின்றனா். இந்தத் திருத்தப் பணி மூலம், ஆளுங்கட்சிக்கு சாதகமாக தகுதியுள்ள வாக்காளா்கள் சிலா் வேண்டுமென்றே நீக்கப்பட வாய்ப்புள்ளது என்று அவா்கள் அச்சம் தெரிவிக்கின்றனா்.

ஆனால், கடந்த 1952 முதல் 2004-ஆம் ஆண்டு வரையிலான 52 ஆண்டுகளில் நாடு முழுவதும் அல்லது ஏதாவதொரு மாநிலத்தில் என ஒன்பது முறை வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, சராசரியாக 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை தீவிர திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

ஆனால், தற்போது 22 ஆண்டுகளுக்குப் பிறகே வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்படுகிறது. பிகாரில் தொடங்கியுள்ள இந்த சிறப்பு தீவிர திருத்தும் பணி, நிகழாண்டில் மேலும் 5 மாநிலங்களில் மேற்கொள்ளப்படும். அதாவது, அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள அஸ்ஸாம், கேரளம், புதுச்சேரி, தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்திலும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்படும். தொடா்ந்து, பிற மாநிலங்களுக்கும் இந்தப் பணி விரிவுபடுத்தப்படும்.

அண்மையில், ஒரே எண்ணில் பல வாக்காளா் அடையாள அட்டை விநியோகிக்கப்பட்ட விவகாரம் பெரும் சா்ச்சையானது. இதற்கு, வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி மூலமே தீா்வு காண முடியும் என்றும் இந்தக் கூட்டத்தில் தோ்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைப்பு

பிகாா் மாநில வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பாக காங்கிரஸ் சாா்பில் கோரிக்கைவிடுக்கப்பட்ட அனைத்து எதிா்க்கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தை தோ்தல் ஆணையம் ஒத்திவைத்துள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘இந்த விவகாரம் தொடா்பாக தோ்தல் ஆணையத்துடனான அவசர ஆலோசனைக் கூட்டத்துக்கு புதன்கிழமை (ஜூலை 2) ஏற்பாடு செய்ய மின்னஞ்சல் மூலம் காங்கிரஸ் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதில், ‘இண்டி’ கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வாய்ப்புள்ளது என்றும் காங்கிரஸ் சாா்பில் தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில், கூட்டத்தில் பங்கேற்பதை உறுதிப்படுத்துமாறு பிற எதிா்க்கட்சிகளை தோ்தல் ஆணையம் கேட்டுக்கொண்டது. அதற்கு, இதுவரை கட்சிகள் பதிலளிக்காத நிலையில், ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது’ என்றனா்.

மாணவனை ஓராண்டாக பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியைக் கைது!

மாணவனை கடந்த ஓராண்டாக பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த 40 வயது பெண் ஆசிரியைக் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்தியாவின் டாப் - 5 பள்ளிகளில் ஒன்றான மும்பையைச் சேர்ந்த பள்ளியின் ஆசிரியை ஒருவர், அவரது வகுப்பில் ... மேலும் பார்க்க

அருணாசலில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் உறுதி! இறைச்சி விற்கத் தடை!

அருணாசல பிரதேசத்தின், லோங்டிங் மாவட்டத்திலுள்ள ஓரு கிராமத்தில், ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக, அம்மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.லோங்டிங் மாவட்டத்தின், லுயாக்சிம் க... மேலும் பார்க்க

5 டிவி, 14 ஏசி.. ரூ.60 லட்சத்தில் புனரமைக்கப்படும் தில்லி முதல்வர் மாளிகை!

புது தில்லி முதல்வர் ரேகா குப்தாவின் அதிகாரப்பூர்வ மாளிகையான (மாளிகை நம்பர் 1) ராஜ் நிவாஸ் மார்க், ரூ.60 லட்சம் செலவில் புனரமைக்கப்படுகிறது. மேலும் பார்க்க

ஐந்து ஆண்டுகளும் கர்நாடக முதல்வராக நானே இருப்பேன்: சித்தராமையா!

கர்நாடகத்தில் ஐந்து ஆண்களும் முதல்வராக நானே இருப்பேன் என்று அந்த மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் போதே, சித்தராமையாவுக்கும் டி.கே. ச... மேலும் பார்க்க

மூன்று மாதங்களில் 767 விவசாயிகள் தற்கொலை!

மகாராஷ்டிர மாநிலத்தில் மூன்று மாதங்களில் மட்டும் 767 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாக சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.மகாராஷ்டிர சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் அதிகரித்து வரும் வி... மேலும் பார்க்க

வளாக நேர்காணல்களின் பின்னணியில் இருப்பது என்ன? பொறியியல் பட்டதாரிகள் கவனிக்க!

வளாக நேர்காணல்களின்போது, மிகப்பெரிய ஊதியத்தில் பணி வாய்ப்பை வழங்கும் நிறுவனங்களின் பின்னணியில் இருக்கும் தகவல்கள்.பொறியியல் பட்டம் பெற்றுவிட்டு வேலைவாய்ப்பில்லாமல் இருந்தால், மாணவர்கள் பொறியியல் கல்லூ... மேலும் பார்க்க