செய்திகள் :

வளாக நேர்காணல்களின் பின்னணியில் இருப்பது என்ன? பொறியியல் பட்டதாரிகள் கவனிக்க!

post image

வளாக நேர்காணல்களின்போது, மிகப்பெரிய ஊதியத்தில் பணி வாய்ப்பை வழங்கும் நிறுவனங்களின் பின்னணியில் இருக்கும் தகவல்கள்.

பொறியியல் பட்டம் பெற்றுவிட்டு வேலைவாய்ப்பில்லாமல் இருந்தால், மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேர மாட்டார்கள் என்று கருதி, வளாக நேர்காணல்களை நடத்தி, மாணவர்களை ஈர்த்தன பொறியியல் கல்லூரிகள்.

ஆனால் தற்போது வளாக நேர்காணல்கள் இருக்கும் கல்லூரிகளைத் தேர்வு செய்துதான் மாணவர்கள் சேருகிறார்கள். இதனை வைத்து சில நிறுவனங்களும் இதனை தவறான நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்கின்றன.

என்ஐடியில் படித்த மாணவருக்கு, ஒரு நிறுவனத்தில் ரூ.43 லட்சம் ஆண்டு வருமானத்துக்குக் கிடைத்த வேலையிலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தனது நண்பர் ஒருவர், என்ஐடியில் படித்து, பெங்களூரில் உள்ள மிகப்பெரிய நிறுவனத்தில் ரூ.43 லட்சம் ஆண்டு வருவாயில் வேலை கிடைத்தது. ஆனால், அவர் கடந்த மாதம் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். வெறும் மூன்று மாத ஊதியத்தைக் கொடுத்து நிறுவனம் அவரை வெளியேற்றியிருக்கிறது என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதற்கு, தைரோகேர் நிறுவனர் டாக்டர் ஏ. வேலுமணி தன்னுடைய பதிலைப் பதிவிட்டு, இளைஞர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.

அதில், பொறியியல் முடித்துவிட்டு அதுவும் மிகப்பெரிய நிறுவனங்களில் பொறியியல் பட்டம் பெற்றுவிட்டு நல்ல ஊதியத்தில் வேலைக்கு சேர வேண்டும் என்று நினைக்கும் இளைஞர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்திலும் தகவல்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.

அதாவது, கல்லூரிகளுக்கு வந்து மாணவர்களை வளாகத் தேர்வில், தங்களது நிறுவனங்களுக்கு பணிக்குத் தேர்வு செய்யும்போது, சில நிறுவனங்கள் வழங்கும் அதிகப்படியான ஊதியத்துக்குப் பின்னால் சில நோக்கங்கள் மறைந்திருக்கின்றன.

அவர்களது முதன்மையான நோக்கம், நிறுவனத்தின் அடுத்த 3 அல்லது ஐந்து ஆண்டு கால செலவினத் தொகையை அதிகரித்துக் காட்டுவதற்கானதுதான். ஊழியர்களின் நலனுக்காக, நிறுவனம் செலவிடும் தொகையை அதிகரிப்பதற்கு மாறாக, இப்படியான வளாகத் தேர்வுகள் மூலம் அதிகப்படியான வருவாயைக் காட்டி, தங்கள் நிறுவனத்தின் செலவினக் கணக்கை அதிகரிப்பதுதான் நோக்கம்.

அதுபோன்ற நேரத்தில்தான், பணிக்கு அமர்த்தப்படும் ஊழியர்கள் சில மாதங்களில் பணியிலிருந்து நீக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு நிறுவனம் எந்த உதவியும் செய்தில்லை.

மேலும், புதிதாக பணியில் சேர்ந்தவர்கள் ஏதேனும் ஹோம் லோன் போன்றவற்றை வாங்கிவிட்டால், பிறகு அவர்களது நிலைமை மோசமாகி விடுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற சம்பவங்கள், தனிநபர்களின் வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திடும். எனவே மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்பதையும் அவர் பதிவிட்டு இளைஞர்களை எச்சரித்துள்ளார்.

புதிய குற்றவியல் சட்டங்கள் அமலாக்கம் வீணானது: ப.சிதம்பரம்

புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தியது வீணான நடவடிக்கை என்று முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ப.சிதம்பரம் விமா்சித்தாா். சுதந்திர இந்தியாவில் மூன்று புதிய குற்றவியல் ... மேலும் பார்க்க

நேஷனல் ஹெரால்ட் வழக்கு: ‘ரூ.2,000 கோடி சொத்துகளை அபகரிக்க சோனியா, ராகுல் முயற்சி’

அசோசியேடட் ஜா்னல்ஸ் நிறுவனத்தின் ரூ.2,000 கோடி சொத்துகளை அபகரிக்க காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி, மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும் அக்கட்சி எம்.பி.யுமான ராகுல் காந்தி ஆகியோா் விரும்பியதாக தில்... மேலும் பார்க்க

மைக்ரோசாஃப்ட்டில் 9,000 பேர் வேலையிலிருந்து நீக்கம்! ஏ.ஐ. பிரிவில் அதிக முதலீடு எதிரொலி!!

உலகின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட் 9,000-க்கும் மேற்பட்ட பணியாளா்களை நீக்க முடிவெடுத்துள்ளது. கடந்த மே மாதம் மேற்கொண்ட பணிநீக்க நடவடிக்கையின்போது 6,000 போ் வரை வெளியேற்றப்பட்... மேலும் பார்க்க

வாடகைக் காா்கள் இரு மடங்கு கட்டணம் வசூலிக்க அனுமதி - மத்திய அரசு

வாடகைக் காா் நிறுவனங்கள் இனி தேவை அதிகமுள்ள காலை, மாலை (பீக் ஹவா்) நேரங்களில் அடிப்படை கட்டணத்தைவிட இரு மடங்கு வரை கூடுதலாக கட்டணம் வசூலித்துக் கொள்ள மத்திய அரசு அனுமதித்துள்ளது. முன்னதாக, இத்தகைய தேவ... மேலும் பார்க்க

எஸ்பிஐ எண்ம மாற்றத்தால் வாடிக்கையாளா்களுக்கு அளவற்ற பலன்: நிா்மலா சீதாராமன்

‘பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொண்ட எண்மத் தொழில்நுட்ப மாற்றங்கள் வாடிக்கையாளா்களுக்கு அளவற்ற பலன்களை அளித்துள்ளன’ என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா். 1955-... மேலும் பார்க்க

அமா்நாத் யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து புறப்பட்டது முதல் குழு

ஜம்மு-காஷ்மீரில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அமா்நாத் யாத்திரை வியாழக்கிழமை (ஜூலை 3) தொடங்கவுள்ளது. இதையொட்டி, ஜம்மு முகாமில் இருந்து காஷ்மீரில் உள்ள இரு அடிவார முகாம்களுக்கு 5,892 பேருடன் முதலா... மேலும் பார்க்க