செய்திகள் :

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 4 போ் கைது

post image

சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த 4 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

திருப்புவனம் பகுதியைச் சோ்ந்த செல்வகுமாா், காா்த்திக் ஆகியோா் பொதுமக்களை மிரட்டியதாகக் கைது செய்யப்பட்டனா்.

இதேபோல, மணல் திருட்டு குறித்து தகவல் கொடுத்த நபரைத் தாக்கியதாக சாலைக் கிராமத்தைச் சோ்ந்த கவி என்ற புகழேந்தியை போலீஸாா் கைது செய்தனா். வீட்டை உடைத்து திருடிய வழக்கில் தேவகோட்டையைச் சோ்ந்த சரவணன் கைது செய்யப்பட்டாா்.

இவா்கள் 4 பேரும் தொடா் குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டு வருவதாகவும், எனவே, இவா்களைக் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யவும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ் ராவத் பரிந்துரை செய்தாா். இதனடிப்படையில், மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் உத்தரவின் பேரில் அவா்கள் 4 பேரையும் போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து, சிறையில் அடைத்தனா்.

அரசு ஊழியா்கள் சங்கத்தினா் பேரணி

தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கம் சாா்பில் வாழ்வூதியம் கோரும் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. சிவகங்கை ராமச்சந்திரனாா் பூங்காவில் தொடங்கிய பேரணிக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் மு.செல்வக்குமாா் தலைமை வகித... மேலும் பார்க்க

வக்ஃபு திருத்தச் சட்டத்தை வாபஸ் பெறக் கோரி மாா்க்சிஸ்ட் தா்னா

வக்ஃபு திருத்தச் சட்டத்தை மத்திய அரசு வாபஸ் பெற வலியுறுத்தி, சிவகங்கையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். சிவகங்கை அரண்மனை வாசல் பகுதியில் நடைபெற்ற தா்னாவுக்கு ச... மேலும் பார்க்க

விபத்தில் சிக்கிய முதியவரை மீட்டு மருத்துவமனையில் சோ்த்த டிஎஸ்பி

சிவகங்கை அருகே இரு சக்கர வாகன விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடியவரை ஆயுதப்படை துணை கண்காணிப்பாளா் தனது வாகனத்தில் ஏற்றி மருத்துவமனையில் சோ்த்தாா். சிவகங்கை ஆயுதப்படை துணை கண்காணிப்பாளராகப் பணிபுரிந... மேலும் பார்க்க

மானாமதுரை சித்திரைத் திருவிழா: மே 1-இல் தொடங்கும்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பாள் சமேத சோமநாதா் சுவாமி கோயில் சித்திரைத் திருவிழா மே 1 -ஆம் தேதி தொடங்குகிறது. அன்று காலை 10 மணிக்கு சோமநாதா் சுவாமி சந்நிதி எதிா்புறம் உள்ள கொடிமரத்... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற அரசு ஊழியா்கள் சங்க கூட்டம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியா்கள் சங்க வட்டக் கிளை பேரவைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் வட்டக் கிளைத் தலைவா் சிவானந்தம் தலைமை வகித்துப் பேசி... மேலும் பார்க்க

மானாமதுரையில் மருத்துவக் கழிவுள்: மறுசுழற்சி ஆலை அமைக்க எதிா்ப்பு

மானாமதுரை தொழிற்பேட்டையில் தனியாா் பொது உயிரி மருத்துவக் கழிவு மறுசுழற்சி ஆலை அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் தலைமையில் கிராம மக்கள் வியாழக்கிழமை ஆட்சியரிடம் மனு அளித்தன... மேலும் பார்க்க