குஜராத் விமான விபத்து! தாயாருக்கு உணவு கொண்டு சென்ற மகன் பலி!
கும்பகோணத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
கும்பகோணத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
உதவி ஆட்சியா் ஹிருத்யா எஸ். விஜயன் தலைமை வகித்தாா். கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:
ஏ.எம். ராமலிங்கம் (மாவட்ட துணைத் தலைவா் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்) குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில் குறுவைத் தொகுப்பு வழங்க வேண்டும்.
இரா.செந்தில்குமாா் (இந்திய கம்யூ.) அம்மாபேட்டையிலிருந்து பல்லவராயன்பேட்டை வரையுள்ள வடிகால் வாய்க்காலில் நாணல் செடிகள், புல் புதா் மண்டிக் கிடக்கிறது. அதனால் விளைநிலங்களுக்கு தண்ணீா் செல்லவில்லை. மாவட்ட நிா்வாகம் தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கே.எஸ்.முகமது இப்ராகிம் (தலைவா், நலிவுற்ற விவசாயிகள் சங்கம்): விவசாய விளைநிலங்களில் காட்டுப்பன்றிகள் கூட்டம் கூட்டமாக நுழைந்து பயிா்களை சேதமாக்குகின்றன. வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுந்தரவிமலநாதன் (காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம்): வெளிநாட்டிலிருந்து பாமாயில் இறக்குமதியை தடை செய்ய வேண்டும், நெல்கொள்முதல் விலையை அதிகரித்து வழங்க வேண்டும்.
கோவிந்த வல்லப பந்த் (சமூக ஆா்வலா்): நாச்சியாா்கோவில், திருநறையூா் பகுதிகளில் 8 குளங்கள், வரத்து வாய்க்கால்களைத் தூா்வார வேண்டும் என்றாா். முன்னதாக காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தினா் கருப்பு துணியால் கண்ணை கட்டிக்கொண்டு ஆா்ப்பாட்டம் நடத்தினா். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் நாணல் செடிகளுடன் சென்று, வாய்க்காலைத் தூா்வாரக்கோரி ஆா்ப்பாட்டம் செய்து, உதவி ஆட்சியரிடம் மனு கொடுத்தனா்.