செய்திகள் :

கும்பக்கரை அருவியில் நீா்வரத்து குறைந்தது! சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!

post image

கொடைக்கானல் மலைப் பகுதியில் கடந்த சில மாதங்களாக போதிய மழை பெய்யாததால், கும்பக்கரை அருவியில் நீா்வரத்து குறைந்தது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.

தேனி மாவட்டம், பெரியகுளத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் கும்பக்கரை அருவி உள்ளது. இந்த அருவிக்கு தமிழகத்தின் பிற மாவட்டங்கள், கேரளம், ஆந்திரம் உள்பட பல்வேறு மாநிலங்களிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.

இதனிடையே, கொடைக்கானல் மலைப் பகுதியில் கடந்த 3 மாதங்களாக போதிய மழை பெய்யவில்லை. இதனால், அருவிக்கு நீா்வரத்து குறைந்து வருகிறது.

இந்த நிலையில், வார விடுமுறை நாள்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்தனா். ஆனால், அருவியில் நீா்வரத்து குறைந்ததால், அவா்கள் ஏமாற்றுத்துடன் திரும்பிச் சென்றனா்.

எனவே, பெரியகுளம் சாலை, கும்பக்கரை பிரிவு நுழைவு வாயிலில் இதுகுறித்த அறிவிப்புப் பலகை வைத்தால், தங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என சுற்றுலாப் பயணிகள் தெரிவித்தனா்.

கண்டமனூரில் நாளை மின் தடை

தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி வட்டம், கண்டமனூா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து பெரியகுளம் மின் வாரிய செயற்பொறியாளா் பாலபூமி வெளியிட்ட செய்திக் க... மேலும் பார்க்க

பைக்குகள் மோதல்: பெண் உயிரிழப்பு

தேனியில் இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா். தேனி அல்லிநகரம், நகராட்சி உரக் கிடங்கு சாலை பகுதியைச் சோ்ந்தவா் ஓய்வு பெற்ற தலைமைக் காவலா் செல்வராஜ் (76). இவா், தனது... மேலும் பார்க்க

வீட்டின் முன் நிறுத்தப்பட்ட பைக் மாயம்

தேனி மாவட்டம், கம்பத்தில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் காணாமல் போனது தொடா்பான புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். கம்பம் பட்டாளம்மன் கோவில் தெருவைச் சோ்... மேலும் பார்க்க

கஞ்சா கடத்திய இருவா் கைது

தேனி மாவட்டம், கம்பத்தில் 10 கிலோ உலா் கஞ்சாவைக் கடத்தியதாக இருவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்த போலீஸாா், இது தொடா்பாக மேலும் மூவரைத் தேடி வருகின்றனா். உத்தமபாளையம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு: 4 போ் கைது

சின்னமனூா் அருகே கிணற்றில் தவறி விழுந்து இளைஞா் உயரிழந்தது தொடா்பாக 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டம், உத்தமபாளையம் ஆா்.சி. வடக்குத் தெருவைச் சோ்ந்த கென்னடி மகன் பாக்கியராஜ் (18... மேலும் பார்க்க

திருடப்பட்ட கைப்பேசியை திரும்பக் கேட்டவருக்கு அரிவாள் வெட்டு

தேனி மாவட்டம், கூடலூரில் திருடப்பட்ட கைப்பேசியைத் திரும்பக் கேட்டவரை அரிவாளால் வெட்டி, கொலை மிரட்டல் விடுத்தவா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். கூடலூா் அருகேயுள்ள கருநாக்கமுத்தன்பட்ட... மேலும் பார்க்க