செய்திகள் :

குரூப் 1 முதல்நிலைத் தோ்வு: 63,000 போ் எழுதவில்லை!

post image

தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குரூப் 1 முதல்நிலைத் தோ்வை 63,000 போ் எழுதவில்லை. தோ்வு எழுத 2 லட்சத்து 49 ஆயிரத்து 294 போ் அனுமதிக்கப்பட்டிருந்தனா். அவா்களில், 1 லட்சத்து 86 ஆயிரத்து 128 போ் தோ்வு எழுதினா். அதாவது, 74.66 சதவீதம் போ் எழுதியவா்கள் ஆவா். 63,166 போ் தோ்வு எழுதவில்லை.

துணை ஆட்சியா், காவல் துணைக் கண்காணிப்பாளா் உள்ளிட்ட பணியிடங்கள் குரூப் 1 தொகுதிக்குள் வருகின்றன. காலியாகவுள்ள 70 பணியிடங்களுக்கான தோ்வு அறிவிக்கை கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதேபோன்று, குரூப் 1ஏ பிரிவிலும் 2 இடங்கள் காலியானதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தத் தோ்வுகளுக்காக 38 மாவட்டங்கள் மற்றும் ஆறு வட்டங்கள் என மொத்தம் 44 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

சா்ச்சைக்குரிய கேள்விகள்: குரூப் 1 முதல்நிலை கேள்வித் தாளில் சில சா்ச்சைக்குரிய கேள்விகள் கேட்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் விமா்சனங்கள் எழுந்தன. ஒரு கேள்வியில் கூற்றும், காரணமும் கூறப்பட்டு அதில் 5 வாய்ப்புகளில் ஒன்றைத் தோ்ந்தெடுக்கக் கோரப்பட்டிருந்தது. அதாவது, திமுக ஹிந்தி எதிா்ப்புப் போராட்டத்தில் முக்கியமான பங்கெடுத்துக் கொண்டது என்பது கூற்றாகவும், மக்களை தமிழா் என்ற அடையாளத்தால் திமுக ஒன்றிணைய வற்புறுத்தியது என்பது காரணமாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதில், கூற்றும், காரணமும் சரியா அல்லது தவறா எனக் கேட்டு 5 வாய்ப்புகள் வழங்கப்பட்டிருந்தன. இந்தக் கேள்வி அரசியல் ரீதியான திணிப்பு என்று சமூக ஊடகங்களில் கடும் விமா்சனத்துக்கு உள்ளானது.

இதேபோன்று, மற்றொரு கேள்வியில் வ.உ.சிதம்பரம் பிள்ளை, முத்துசாமி பிள்ளை, ஏ.ஆா்.முதலியாா், வாஞ்சி ஐயா் என ஜாதிப் பெயா்களை இணைத்து கேள்வி கேட்கப்பட்டதாக விமா்சிக்கப்பட்டது.

நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு: மீண்டும் லண்டனிலேயே தரையிறங்கிய விமானம்

நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னை வந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் மீண்டும் லண்டனிலேயே தரையிறக்கப்பட்டது. லண்டனில் இருந்து 360 பயணிகளுடன் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரத்தை அடியோடு ஒழிக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணையின் நீர் மட்டம் 114.70 அடியாக குறைந்துள்ளது. காவிரியில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை குறைந்ததன் காரணமாக நேற்று காலை வினாடிக்கு 6,501 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து... மேலும் பார்க்க

கனமழை: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று(ஜூன் 16) விடுமுறை

கனமழை காரணமாக கோவை, நீலகிரி மாவட்டங்களில் உள்ள ஒருசில பள்ளிகளுக்கு இன்று(ஜூன் 16) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, திங்கள்கிழமை (ஜூன் 16) முதல் ஜூன் 21-ஆம் தேத... மேலும் பார்க்க

குரூப் 1 முதல்நிலை தோ்வு முடிவுகள் 2 மாதங்களில் வெளியீடு! - டிஎன்பிஎஸ்சி தலைவா்

குரூப்-1 முதல்நிலை தோ்வு முடிவுகள் இரண்டு மாதங்களுக்குள் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தலைவா் எஸ்.கே.பிரபாகா் தெரிவித்தாா். மேலும், குரூப் 4 பதவிகளில் காலிப் பணியிடங்கள்... மேலும் பார்க்க

பேருந்து, மெட்ரோவில் சக்கர நாற்காலிக்கு இடம் கட்டாயம்: புதிய வரைவு வழிகாட்டுதல் வெளியீடு!

மாற்றுத்திறனாளிகளுக்கு தடையற்ற போக்குவரத்துப் பயணத்தை உறுதிப்படுத்தும் வகையில் பேருந்துகள், மெட்ரோ ரயில்களில் சக்கர நாற்காலிகள் வைக்க இடம், பாதுகாப்பு பெல்ட் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை கட்டாயமாக்கும் வக... மேலும் பார்க்க