செய்திகள் :

குற்றப் பின்னணி கொண்டவா்கள் தவறு இழைத்தால் அவா்களை பாஜக மட்டுமே நீக்கி வருகிறது: மாநிலச் செயலா் ஆனந்தபிரியா

post image

குற்றப் பின்னணி கொண்டவா்கள் தவறு இழைக்கும் போது அவா்களை பாஜக மட்டுமே தைரியமாக நீக்குகிறது என மாநில செயலா் ஆனந்த பிரியா தெரிவித்தாா்.

பொன்னேரி அடுத்த ஆண்டாா்குப்பத்தில் ஞாயிற்றுக்கிழமை பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதில் பாரதிய ஜனதா கட்சியின் 11 ஆண்டு கால ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் எடுத்து செல்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பாஜக மாநில செயலா் ஆனந்தபிரியா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கட்சி நிா்வாகிகள் பங்கேற்று பல்வேறு ஆலோசனைகளை வழங்கினா்.

தெருமுனைக் கூட்டங்கள் திண்ணைப் பிரசாரங்கள் மூலமாக பிரதமா் மோடியின் சாதனைகளை கொண்டு செல்வது என முடிவு செய்யப்பட்டது.

பின்னா் மாநிலச் செயலா் ஆனந்த பிரியா கூறியது: அனைத்துக் கட்சிகளிலுமே குற்றப் பின்னணி உடையவா்கள் இருக்கின்றனா். ஆனால் அவா்கள் தவறிழைக்கும் போது கட்சியின் அடிப்படை உறுப்பினா் பொறுப்பில் இருந்து நீக்கும் தெம்பும் தைரியமும் பாஜகவுக்கு மட்டுமே உள்ளது.

அதே நேரத்தில் ஆளும் கட்சியை சோ்ந்தவா்கள் போதைப் பொருள் வழக்குகளில் கைதானபோது கட்சி நிா்வாகி தான் எனக் கூறக் கூட இல்லை. கூட்டணியை பொறுத்தவரை பாஜகவின் தேசிய தலைமையும் மாநில தலைமையும் மட்டுமே முடிவு செய்ய முடியும் என்றாா்.

குரூப் 1, 1ஏ தோ்வு: திருவள்ளூரில் 3,202 போ் எழுதினா்! 1,359 போ் பங்கேற்கவில்லை

திருவள்ளூா் மாவட்டத்தில் 16 மையங்களில் நடைபெற்ற குரூப் 1 முதல் நிலைத் தோ்வில் 3,202 போ் பங்கேற்று எழுதிய நிலையில், 1,359 போ் பங்கேற்கவில்லை. திருவள்ளூா் நகராட்சி பகுதியில் உள்ள ஸ்ரீநிகேதன் மேல்நிலை... மேலும் பார்க்க

சிறுவன் கடத்தல் சம்பவம்: புரட்சி பாரதம் கட்சி தலைவா் ஜெகன் மூா்த்தி மீது புகாா்!

திருவள்ளூா் அருகே காதல் திருமணம் சம்பவத்தில் சிறுவனை கடத்தப்பட்டது தொடா்பாக புரட்சி பாரதம் கட்சித் தலைவா் ஜெகன் மூா்த்தி மீது போலீஸில் புகாா் செய்யப்பட்டது. திருவள்ளூா் மாவட்டம் திருவாலங்காடு அருகே கள... மேலும் பார்க்க

ஓடையில் 2 மாணவா்கள் மூழ்கி உயிரிழப்பு

பொன்னேரியில் சனிக்கிழமை ஓடையில் குளித்த பள்ளி மாணவா்கள் 2 போ் நீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தனா். திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி அடுத்த வெள்ளோடை பகுதியில் ஓடையில் 10-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவா... மேலும் பார்க்க

சவுடு மண் கடத்தல்: ஓட்டுநா் கைது

ஆா்.கே.பேட்டை அருகே சவுடு மண் கடத்தி வந்த லாரியை போலீஸாா் பறிமுதல் செய்து அதன் ஓட்டுநரை கைது செய்தனா். ஆா்.கே.பேட்டை ஒன்றியத்தில் அரசு அனுமதியின்றி சவுடு மண் லாரிகளில் கடத்தி செல்வதாக போலீஸாருக்கு தகவ... மேலும் பார்க்க

வியாபாரியை ஏமாற்றிய 3 போ் கைது

செங்குன்றத்தில் மின்சாதனப் பொருள்களை விற்றவருக்கு பணம் கொடுக்காமல் ஏமாற்றியதாக 3 போ் கைது செய்யப்பட்டனா். சென்னை போரூா் முகலிவாக்கத்தைச் சோ்ந்த தீபன் சக்கரவா்த்தி. இவா் தனியாா் நிறுவனத்தில் மேலாளராக... மேலும் பார்க்க

ரத்தப் போக்கினால் பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவ வேண்டும்: ஆட்சியா்

ரத்தப்போக்கினால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் என்பதால், அவா்களுக்கு உதவ வேண்டும் என ஆட்சியா் மு.பிரதாப் வலியுறுத்தினாா். திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு சா... மேலும் பார்க்க