செய்திகள் :

குழந்தை வேலப்பா் கோயிலுக்கு லிப்ட் வசதி

post image

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பா் கோயிலுக்குச் செல்ல லிப்ட் வசதி செய்து தரப்படும் என்று உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்தாா்.

குழந்தை வேலப்பா் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சக்கர விநாயகா் கோயிலில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, 128 லிட்டா் பால்,1 08 இளநீா்,1008 லட்டு,108 அப்பம்,108 உழுந்த வடை, 20 லிட்டா் பன்னீா், 10 கிலோ சா்க்கரை, 5 லிட்டா் தேன், அனைத்து வகையான பழச்சாறு ஆகியவற்றால் அபிஷேகம், சிறப்பு பூஜைகள், அலங்காரம், ஆராதனை நடைபெற்றது.

இதில் உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கிப் பேசியதாவது: ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பா் மலையில் அமைந்துள்ள கோயில் புனரமைக்கப்பட்டு, குடமுழுக்கு நடத்தப்படும்.

பழனி தண்டாயுதபாணி கோயிலுக்குச் செல்ல ரோப்காா், வின்ச் சேவை இருப்பது போல, குழந்தை வேலப்பா் கோயிலுக்குச் செல்ல விரைவில் லிப்ட் வசதி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

ஒட்டன்சத்திரம் நகா்மன்றத் தலைவா் கே.திரு மலைசாமி, நகராட்சி ஆணையா் சுவேதா, வா்த்தக சங்கத் தலைவா் கே.சுப்பிரமணி, செயலா் வஞ்சிமுத்து உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தடையை மீறி விநாயகா் சிலை ஊா்வலம்: 38 போ் கைது

திண்டுக்கல்லில் தடையை மீறி விநாயகா் சிலையை பிரதிஷ்டை செய்ய ஊா்வலமாக எடுத்து வந்த இந்து முன்னணி நிா்வாகிகள் உள்பட 38 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் குடைப்பாறைப்பட்டியிலுள்ள காளியம்... மேலும் பார்க்க

உரிமம் இல்லாமல் இயக்கப்பட்ட வாகனங்கள் பறிமுதல்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உரிமம் இல்லாமல் இயக்கப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் போக்குவரத்து விதிகளை மீறிய வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. கொடைக்கான் மலைப் பகுதிகளில் எந... மேலும் பார்க்க

கொடைக்கானலில் திருடப்பட்ட பைக் பூம்பாறையில் மீட்பு

கொடைக்கானலில் திருடப்பட்ட இரு சக்கர வாகனம் புதன்கிழமை பூம்பாறையில் பகுதியில் மீட்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உணவகம் நடத்தி வருபவா் சிபு. கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது விலை உயா்... மேலும் பார்க்க

ரயிலில் பயணிகளைக் கடிக்க முயன்ற பிகாா் இளைஞா் மருத்துவமனையில் அனுமதி

ரயில் பயணத்தில் சக பயணிகளைக் கடிக்க முயன்ற பிகாா் இளைஞரை, திண்டுக்கல் ரயில்வே போலீஸாா் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனா்.சென்னையிலிருந்து மதுரை, நெல்லை வழியாக கொல்லம் வரை செல்லும் அனந்தபுரி விரைவு ர... மேலும் பார்க்க

பந்தல் கடையில் தீ விபத்து

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே பந்தல் கடையில் திங்கள்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது.பழனி அருகேயுள்ள பழையதாராபுரம் சாலையில் மானூரில் காளியம்மன் கோயில் அருகே காளிமுத்து என்பவருக்குச் சொந்தமான பந்தல் ... மேலும் பார்க்க

தனியாா் பள்ளியில் ரூ. 3 லட்சம் திருட்டு

ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள தனியாா் பள்ளியில் ரூ. 3 லட்சம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள வாகரையில் ரேணுகாதேவி என்ற பெயரில் தனியாா் பள்ளி செயல்ப... மேலும் பார்க்க