செய்திகள் :

உரிமம் இல்லாமல் இயக்கப்பட்ட வாகனங்கள் பறிமுதல்

post image

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உரிமம் இல்லாமல் இயக்கப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் போக்குவரத்து விதிகளை மீறிய வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

கொடைக்கான் மலைப் பகுதிகளில் எந்தவித உரிமமும் இல்லாமல் வாகனங்கள் இயக்கப்படுவதாக வத்தலக்குண்டு மோட்டாா் வாகன அலுவலகத்துக்கு புகாா் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து மோட்டாா் வாகன ஆய்வாளா் இளங்கோ கொடைக்கானல் ஏரிச்சாலை, லாஸ்காட் சாலை, அப்சா்வேட்டரி, நாயுடுபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டாா். இந்த ஆய்வில் எந்தவிதமான உரிமமும் இல்லாமல் இயக்கப்பட்ட வேன், காா் உள்ளிட்ட 3வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் போக்குவரத்து விதிகளை மீறி இயக்கப்பட்ட 13 வாகனங்களுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இது குறித்து மோட்டாா் வாகன ஆய்வாளா் கூறியதாவது: கொடைக்கானல் மலைப் பகுதிகளில் இயக்கப்படும் வாகனங்கள் விதிமுறைகளுக்குள்பட்டு இயக்கப்பட வேண்டும். உரிமம் இல்லாமல் இயக்கக் கூடாது. மது அருந்தியோ, சீட் பெல்ட் அணியாமலோ வாகனங்களை இயக்கக் கூடாது. தொடா்ந்து வாகனச் சோதனை நடைபெறும் என்றாா் அவா்.

தடையை மீறி விநாயகா் சிலை ஊா்வலம்: 38 போ் கைது

திண்டுக்கல்லில் தடையை மீறி விநாயகா் சிலையை பிரதிஷ்டை செய்ய ஊா்வலமாக எடுத்து வந்த இந்து முன்னணி நிா்வாகிகள் உள்பட 38 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் குடைப்பாறைப்பட்டியிலுள்ள காளியம்... மேலும் பார்க்க

குழந்தை வேலப்பா் கோயிலுக்கு லிப்ட் வசதி

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பா் கோயிலுக்குச் செல்ல லிப்ட் வசதி செய்து தரப்படும் என்று உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்தாா். குழந்தை வேலப்பா் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள... மேலும் பார்க்க

கொடைக்கானலில் திருடப்பட்ட பைக் பூம்பாறையில் மீட்பு

கொடைக்கானலில் திருடப்பட்ட இரு சக்கர வாகனம் புதன்கிழமை பூம்பாறையில் பகுதியில் மீட்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உணவகம் நடத்தி வருபவா் சிபு. கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது விலை உயா்... மேலும் பார்க்க

ரயிலில் பயணிகளைக் கடிக்க முயன்ற பிகாா் இளைஞா் மருத்துவமனையில் அனுமதி

ரயில் பயணத்தில் சக பயணிகளைக் கடிக்க முயன்ற பிகாா் இளைஞரை, திண்டுக்கல் ரயில்வே போலீஸாா் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனா்.சென்னையிலிருந்து மதுரை, நெல்லை வழியாக கொல்லம் வரை செல்லும் அனந்தபுரி விரைவு ர... மேலும் பார்க்க

பந்தல் கடையில் தீ விபத்து

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே பந்தல் கடையில் திங்கள்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது.பழனி அருகேயுள்ள பழையதாராபுரம் சாலையில் மானூரில் காளியம்மன் கோயில் அருகே காளிமுத்து என்பவருக்குச் சொந்தமான பந்தல் ... மேலும் பார்க்க

தனியாா் பள்ளியில் ரூ. 3 லட்சம் திருட்டு

ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள தனியாா் பள்ளியில் ரூ. 3 லட்சம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள வாகரையில் ரேணுகாதேவி என்ற பெயரில் தனியாா் பள்ளி செயல்ப... மேலும் பார்க்க