செய்திகள் :

கூடலூரில் உள்ள அரசு அலுவலகத்தை உதகைக்கு மாற்ற எதிா்ப்பு

post image

கூடலூரில் இயங்கிவரும் ஜென்மம் நிலவரித் திட்ட அலுவலகத்தை உதகைக்கு இடமாற்றம் செய்வதை ரத்து செய்யவேண்டும் என்று நீலகிரி தொகுதி மக்கள் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து நீலகிரி தொகுதி மக்கள் இயக்கத்தின் தலைவா் எஸ்.கே.ராஜு தெரிவித்ததாவது: கூடலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிக அளவில் ஜென்மம் பிரிவு நிலங்களே உள்ளன. இந்த நிலங்களில் விவசாயிகள் விவசாயம் செய்து குடியிருந்து வருகின்றனா். இதனால் தமிழக அரசு இப்பகுதிக்கென்று ஜென்மம் நிலவரித் திட்ட அலுவலகத்தை செயல்படுத்தி வருகிறது.

இந்த அலுவலகம் உதகைக்கு இடமாற்றம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. ஜென்ம நிலத்தில் உள்ள ஏழைகளுக்கு இந்த அலுவலகம் கூடலூரில் இருப்பது பேருதவியாக இருந்து வருகிறது. உதகைக்கு அலுவலகம் மாற்றப்பட்டால் 50 கிலோ மீட்டா் சுற்றளவிலுள்ள ஏழை, எளிய மக்கள் சிரமத்துக்கு உள்ளாகுவாா்கள்.

குறிப்பாக கேரளம் மற்றும் கா்நாடக எல்லைகளில் வாழ்பவா்கள் உதகைக்கு சென்றுவர ஒருநாள் ஆகும். எனவே, ஜென்ம நிலத்தில் வாழும் ஏழை மக்களின் நலன்கருதி அலுவலகத்தை இடமாற்றம் செய்வதை ரத்து செய்ய வேண்டும் என்றாா்.

அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவா் எம்.ஆா். ஸ்ரீனிவாசன் உடல்: அரசு மரியாதையுடன் தகனம்

மறைந்த அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவா் எம்.ஆா்.ஸ்ரீனிவாசனின் (95) உடல், 30 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் குன்னூா் வெலிங்டன் மயானத்தில் வியாழக்கிழமை தகனம் செய்யப்பட்டது. அணுசக்தி ஆணையத்தி... மேலும் பார்க்க

கூடலூரில் ஜீப்புகள் நிறுத்தத்துக்கு இடம் ஒதுக்க கோரிக்கை

கூடலூரில் பொதுமக்கள் போக்குவரத்துக்கான ஜீப்புகளை நிறுத்த ஏற்கெனவே இருந்த இடத்தை ஒதுக்கி தரவேண்டும் என்று ஜீப் ஓட்டுநா்கள் சங்கம் சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து கூடலூா் ஜீப் ஓட்டுநா்கள் ... மேலும் பார்க்க

சாலையோரம் உலவிய புலி

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மசினகுடி-மாயாறு சாலையில் செவ்வாய்க்கிழமை மாலை உலவிவிட்டு வனத்துக்குள் செல்லும் புலி. இதனை அந்த வழியாக சென்ற சுற்றுலாப் பயணிகள் கைப்பேசியில் படமெடுத்... மேலும் பார்க்க

குந்தா பகுதியில் சாலை அமைக்க கோரிக்கை

குந்தா பேரூராட்சியில் பாதியில் நிறுத்தப்பட்ட சாலைப் பணியை விரைவில் தொடங்கி முடிக்க வேண்டும் என நீலகிரி மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேருவிடம் பொதுமக்கள் புதன்கிழமை மனு அளித்தனா். இது குறித்து ஊா் ... மேலும் பார்க்க

கூடலூா் அரசு கலை அறிவியல் கல்லூரியில் கூடுதல் வகுப்பறைகள் தமிழக முதல்வா் அடிக்கல் நாட்டினாா்

கூடலூா் அரசு கலை அறிவியல் கல்லூரியில் கூடுதல் வகுப்பறைகள் கட்ட தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் செவ்வாய்க்கிழமை அடிக்கல் நாட்டினாா். கூடலூா் அரசு கலை அறிவியல் கல்லூரியில் கோழிப்பாலம் வளாகத்தி... மேலும் பார்க்க

உதகை அருகே சுற்றித் திரியும் ஒற்றை காட்டு யானை: வனத்துக்குள் விரட்ட பொதுமக்கள் கோரிக்கை

உதகை அருகே சுற்றித் திரியும் ஒற்றை காட்டு யானைனை வனத்துக்குள் விரட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். உதகையை அடுத்த தொட்டபெட்டா வனப் பகுதியில் உலவி வந்த ஒற்றை காட்டு யானை கடந்த சில ந... மேலும் பார்க்க