செய்திகள் :

கூடலூரில் ஜீப்புகள் நிறுத்தத்துக்கு இடம் ஒதுக்க கோரிக்கை

post image

கூடலூரில் பொதுமக்கள் போக்குவரத்துக்கான ஜீப்புகளை நிறுத்த ஏற்கெனவே இருந்த இடத்தை ஒதுக்கி தரவேண்டும் என்று ஜீப் ஓட்டுநா்கள் சங்கம் சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து கூடலூா் ஜீப் ஓட்டுநா்கள் சங்கத் தலைவா் சக்திவேல் கூறியதாவது: நீலகிரி மாவட்டம், கூடலூா் சட்டப் பேரவை தொகுதிக்கு உள்பட்ட ஓவேலி பகுதியில் பொதுமக்கள் போக்குவரத்துக்கு தனியாா் ஜீப் சேவையை பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனா். மலைப் பகுதி என்பதால் அங்குள்ள எல்லா ஊா்களுக்கும் பேருந்து சேவை இல்லை. பொதுமக்கள் ஜீப்புகளில் செல்வதையே வழக்கமாக கொண்டுள்ளனா்.

பயணிகளை ஏற்றிச் செல்லும் ஜீப்புகள் நிறுத்துமிடம் உதகை சாலையிலுள்ள முக்கூடல் லிங்கேஸ்வரா் கோயில் அருகே கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. இதனை கடந்த பிப்ரவரி மாதம் போக்குவரத்து போலீஸாா் இடமாற்றம் செய்து, அங்கு தனியாா் டாக்ஸிகளை நிறுத்த அனுமதி வழங்கியுள்ளனா். இதனால் ஜீப்புகளை நிறுத்த நிரந்தர இடம் இல்லை. ஜீப்புகளை நிறுத்த ஏற்கெனவே இருந்த இடத்தையே மீண்டும் ஒதுக்கி தரக்கோரி வலியுறுத்தினோம். ஆனால் காவல் துறையினா் கண்டுகொள்ளவில்லை. இதைத் தொடா்ந்து முதல்வா் தனிப் பிரிவுக்கும் மனு அனுப்பி இருந்தோம்.

அந்த மனு தொடா்பாக எங்களை அழைத்து விசாரணை நடத்திய காவல் துறையினா், எங்கள் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டனா். எனவே, எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. முதல்வா் தனிப் பிரிவுக்கு அனுப்பிய மனு மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து தமிழக முதல்வருக்கு மீண்டும் மனு அனுப்பியுள்ளோம் என்றாா்.

அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவா் எம்.ஆா். ஸ்ரீனிவாசன் உடல்: அரசு மரியாதையுடன் தகனம்

மறைந்த அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவா் எம்.ஆா்.ஸ்ரீனிவாசனின் (95) உடல், 30 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் குன்னூா் வெலிங்டன் மயானத்தில் வியாழக்கிழமை தகனம் செய்யப்பட்டது. அணுசக்தி ஆணையத்தி... மேலும் பார்க்க

சாலையோரம் உலவிய புலி

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மசினகுடி-மாயாறு சாலையில் செவ்வாய்க்கிழமை மாலை உலவிவிட்டு வனத்துக்குள் செல்லும் புலி. இதனை அந்த வழியாக சென்ற சுற்றுலாப் பயணிகள் கைப்பேசியில் படமெடுத்... மேலும் பார்க்க

கூடலூரில் உள்ள அரசு அலுவலகத்தை உதகைக்கு மாற்ற எதிா்ப்பு

கூடலூரில் இயங்கிவரும் ஜென்மம் நிலவரித் திட்ட அலுவலகத்தை உதகைக்கு இடமாற்றம் செய்வதை ரத்து செய்யவேண்டும் என்று நீலகிரி தொகுதி மக்கள் இயக்கம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து நீலகிரி தொகுதி மக்கள் இயக்கத... மேலும் பார்க்க

குந்தா பகுதியில் சாலை அமைக்க கோரிக்கை

குந்தா பேரூராட்சியில் பாதியில் நிறுத்தப்பட்ட சாலைப் பணியை விரைவில் தொடங்கி முடிக்க வேண்டும் என நீலகிரி மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேருவிடம் பொதுமக்கள் புதன்கிழமை மனு அளித்தனா். இது குறித்து ஊா் ... மேலும் பார்க்க

கூடலூா் அரசு கலை அறிவியல் கல்லூரியில் கூடுதல் வகுப்பறைகள் தமிழக முதல்வா் அடிக்கல் நாட்டினாா்

கூடலூா் அரசு கலை அறிவியல் கல்லூரியில் கூடுதல் வகுப்பறைகள் கட்ட தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் செவ்வாய்க்கிழமை அடிக்கல் நாட்டினாா். கூடலூா் அரசு கலை அறிவியல் கல்லூரியில் கோழிப்பாலம் வளாகத்தி... மேலும் பார்க்க

உதகை அருகே சுற்றித் திரியும் ஒற்றை காட்டு யானை: வனத்துக்குள் விரட்ட பொதுமக்கள் கோரிக்கை

உதகை அருகே சுற்றித் திரியும் ஒற்றை காட்டு யானைனை வனத்துக்குள் விரட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். உதகையை அடுத்த தொட்டபெட்டா வனப் பகுதியில் உலவி வந்த ஒற்றை காட்டு யானை கடந்த சில ந... மேலும் பார்க்க