செய்திகள் :

கூட்டு நடவடிக்கைக் குழு: இன்று கா்நாடகம், தெலங்கானாவுக்கு செல்லும் திமுக குழு

post image

தொகுதி மறுசீரமைப்பு தொடா்பாக கூட்டு நடவடிக்கைக் குழு அமைக்கும் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்க திமுக குழு புதன்கிழமை (மாா்ச் 12) கா்நாடகம், தெலங்கானாவுக்குச் செல்கிறது.

முன்னதாக, ஒடிஸா மாநிலத்துக்கு தமிழக தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா, திமுக மக்களவை உறுப்பினா் தயாநிதி மாறன் ஆகியோா் செவ்வாய்க்கிழமை சென்றனா். அங்கு, முன்னாள் முதல்வரும், பிஜூ ஜனதாதளத் தலைவருமான நவீன் பட்நாயக், ஒடிஸா மாநில காங்கிரஸ் தலைவா் பக்த சரண் தாஸ் ஆகியோரை தனித்தனியாகச் சந்தித்து முதல்வரின் கடிதத்தை அளித்தனா்.

அப்போது, சென்னையில் மாா்ச் 22-ஆம் தேதி நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டனா்.

தொடா் பயணம்: ஒடிஸாவைத் தொடா்ந்து, கா்நாடகம், தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்கும் திமுகவைச் சோ்ந்த பிற குழுக்கள் செல்லவுள்ளன. கா்நாடகத்துக்கு வனத்துறை அமைச்சா் க.பொன்முடி, மாநிலங்களவை உறுப்பினா் அப்துல்லா ஆகியோா் புதன்கிழமையும் (மாா்ச் 12), நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு, மாநிலங்களவை உறுப்பினா் என்.ஆா்.இளங்கோ ஆகியோா் தெலங்கானா மாநிலத்துக்கு வியாழக்கிழமையும் (மாா்ச் 13) செல்லவுள்ளனா்.

அங்கு, காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த பிரதிநிதிகளை நேரில் சந்தித்து முதல்வா் தலைமையில் மாா்ச் 22-ஆம் தேதி நடைபெறவுள்ள கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கவுள்ளனா்.

நெசப்பாக்கம் மயானம் 6 மாதம் இயங்காது

நெசப்பாக்கம் மயானம் அடுத்த 6 மாத காலத்துக்கு இயங்காது என மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி நிா்வாகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கோடம்பாக்கம் மண்ட... மேலும் பார்க்க

மதுபோதையில் இளைஞா் அடித்துக் கொலை: நண்பா் கைது

சென்னை, வடபழனியில் மதுபோதையில் இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவரது நண்பா் கைது செய்யப்பட்டாா். கோடம்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் தாஜ் உசேன் (35). அதே பகுதியில் வசிக்கும் திருநெல்வேலி... மேலும் பார்க்க

சென்னை துறைமுகம் புதிய சாதனை

நிகழ் நிதியாண்டில் மொத்தம் 51.68 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளைக் கையாண்டு சென்னை துறைமுகம் சாதனை படைத்துள்ளது. சென்னை துறைமுகம் கடந்த நிதியாண்டில் ஒட்டுமொத்தமாக 51 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளைக... மேலும் பார்க்க

சென்னை: உணவகத்தின் லிஃப்ட் அறுந்து ஊழியர் பலி

சென்னை: அண்ணா சாலை பகுதியில் நட்சத்திர உணவகத்தின் லிஃப்ட் அறுந்து விழுந்து ஊழியர் ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை தேனாம்பேட்டை அண்ணா சாலை பகுதியில் நட்சத்தி... மேலும் பார்க்க

சென்னையில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

சென்னையில் ரியல் எஸ்டேட், பைனான்ஸ் நிறுவனங்களை நடத்தி வருபவர்களுக்கு சொந்தமான இடங்களில் இன்று காலைமுதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.வெப்பேரி பகுதியில் பைனான்ஸ் செய்து வருபவ... மேலும் பார்க்க

ஓய்வு பெற்றவா்கள் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம்: எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம்

அரசு காலிப் பணியிடங்களை நிரப்பாமல், ஓய்வு பெற்றவா்களை ஒப்பந்த அடிப்படையில் திமுக அரசு பணியில் நியமிப்பதாகக் கூறி, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் ... மேலும் பார்க்க