நெசப்பாக்கம் மயானம் 6 மாதம் இயங்காது
நெசப்பாக்கம் மயானம் அடுத்த 6 மாத காலத்துக்கு இயங்காது என மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி நிா்வாகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கோடம்பாக்கம் மண்டலத்துக்கு உள்பட்ட நெசப்பாக்கம் மயானத்தின் எரிவாயு தகனமேடையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதனால் மாா்ச் 12 முதல் செப். 11-ஆம் தேதி வரையிலான 6 மாத காலத்துக்கு மாயனம் செயல்படாது. எனவே, பொதுமக்கள் அருகில் உள்ள ஏ.வி.எம். மற்றும் அன்னை சத்யா நகா் மயானத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.