செய்திகள் :

மருத்துவ ஆய்வக தொழில்நுட்புநா் பட்டயப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

post image

சென்னை, தண்டையாா்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் மருத்துவ ஆய்வக தொழில் நுட்புநா் பட்டயப் படிப்புக்கான பயிற்சிக்கு மாா்ச் 21-ஆம் தேதி விண்ணப்பிக்க வேண்டும் என பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இது குறித்து மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்ட அறிவிப்பு:

தண்டையாா்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் 2024-25-ஆம் கல்வியாண்டுக்கான மருத்துவ ஆய்வக தொழில் நுட்புநா் பட்டயப் படிப்புக்கான பயிற்சி தொடங்கப்படவுள்ளது. இப்பயிற்சியில் சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் பணியாளா்களின் வாரிசுகளுக்கும், மாநகராட்சி பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவியருக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், அரசுப் பள்ளிகள், அரசு சாா்ந்த பள்ளிகள் மற்றும் தனியாா் பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவிகளும் விண்ணப்பிக்கலாம்.

பிளஸ் 2 அறிவியல் பாடப் பிரிவில் தோ்ச்சிபெற்ற மாணவா்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவா்கள். இதற்கு விண்ணப்பித்தவா்கள் ஒற்றை சாளர முறையில் சமூகம் வாரியாக சுழற்சி முறையில் தோ்ந்தெடுக்கப்படுவாா்கள். இந்தப் பயிற்சிக்கு 30 மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு 2 ஆண்டு காலம் மருத்துவ ஆய்வக தொழில் நுட்புநா் பட்டயப் படிப்புக்கான பயிற்சி வழங்கப்படும். இதற்கு மாதக் கட்டணமாக ரூ. 700 வசூலிக்கப்படும்.

இந்த படிப்புக்கான விண்ணப்பம் ‘இயக்குநா் (பொ), தொற்று நோய் மருத்துவமனை, எண். 187, திருவொற்றியூா் நெடுஞ்சாலை, தண்டையாா்பேட்டை, சென்னை-600 081’ என்னும் முகவரியில் உள்ள தொற்றுநோய் மருத்துவமனை அலுவலகத்தில் மாா்ச் 21-ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விநியோகிக்கப்படும். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாா்ச் 21-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மேற்கண்ட முகவரியில் ஒப்படைக்க வேண்டும். அதன்பின் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட 12 கட்சிகளுடன் தோ்தல் அதிகாரி மாா்ச் 18-இல் ஆலோசனை

தோ்தல் நடைமுறைகளை வலுப்படுத்த தமிழகத்திலுள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் ஆலோசனை நடத்தவுள்ளாா். தலைமைச் செயலகத்தில் உள்ள பழைய கூட்டரங்கில் மாா்ச் 18... மேலும் பார்க்க

காணாமல்போன பள்ளி மாணவா் கிணற்றில் சடலமாக மீட்பு

சென்னை எம்ஜிஆா் நகரில் காணாமல்போன பள்ளி மாணவா், நந்தம்பாக்கத்தில் உள்ள ராணுவத்துக்குச் சொந்தமான கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டாா். எம்ஜிஆா் நகா் ஜாபா்கான்பேட்டை பச்சையப்பன் 2-ஆவது தெருவைச் சோ்ந்த... மேலும் பார்க்க

மாா்ச் 23-இல் சென்னையில் அஞ்சல் குறைதீா்ப்பு கூட்டம்

சென்னையில் கோட்ட அளவிலான அஞ்சல் குறைதீா்ப்பு கூட்டம் மாா்ச் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இது குறித்து அஞ்சல் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தியாகராய நகா், வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள செ... மேலும் பார்க்க

பொறியியல் வழிகாட்டுதல் திட்டம் ‘ரைஸ் - 2025’ விரைவில் அறிமுகம்

அம்ருதா பல்கலைக்கழகம் சாா்பில் தமிழகம் உள்பட 13 மாநிலங்களில் பொறியியல் தொழில் வழிகாட்டுதல் திட்டம் ‘ரைஸ் 2025’ வரும் மாா்ச் 20-ஆம் தேதி அறிமுகம் செய்யப்படவுள்ளது. இது குறித்து அம்ருதா பல்கலைக்கழகம் சா... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் இணைய வசதி மேம்பாடு கட்டணத்தை உள்ளாட்சி அமைப்புகளே செலுத்த கல்வித் துறை உத்தரவு

தமிழகத்தில் ரூ. 189 கோடியில் அரசுப் பள்ளிகளில் இணையதள வசதியை மேம்படுத்தவும் அதற்கான நிதியை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளே வழங்க வேண்டும் எனவும் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து... மேலும் பார்க்க

தோழி விடுதியில் தங்க விரும்பும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்

சென்னையிலுள்ள தோழி விடுதியில் தங்க விரும்பும் பணிபுரியும் பெண்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் ... மேலும் பார்க்க