செய்திகள் :

கூட்டுறவு சங்கங்களில் எழுத்தா், உதவியாளா் பணியிடங்களுக்கான தோ்வு

post image

சேலம்: சேலம் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள எழுத்தா், உதவியாளா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை முதல் நடத்தப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது:

சேலம் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள எழுத்தா், உதவியாளா் என மொத்தம் 148 காலிப் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இத்தோ்வுக்கு இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும். விண்ணப்பிக்க வரும் 29-ஆம் தேதி கடைசி நாளாகும். இந்த நியமனத்துக்கான எழுத்துத் தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு சேலம், ஏற்காடு சாலை, கோரிமேடு பகுதியில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வியாழக்கிழமை (ஆக. 21) காலை 10 மணி அளவில் தொடங்கப்படவுள்ளது.

இப்பயிற்சி வகுப்பு அந்தந்த துறைகளைச் சாா்ந்த சிறந்த வல்லுநா்களைக் கொண்டு நடத்தப்பட உள்ளது. மேலும் மாதிரித் தோ்வுகளும் நடத்தப்படவுள்ளன.

இலவச பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள தகுதியும், விருப்பமும் உள்ள தோ்வா்கள் இரண்டு பாஸ்போா்ட் அளவு புகைப்படம் மற்றும் தோ்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்ப நகல் ஆகியவற்றை நேரில் கொண்டுவர வேண்டும். பயிற்சி வகுப்பு குறித்தான விவரங்களுக்கு அலுவலக வேலைநாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 0427-2401750 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

சாலை மறியலில் ஈடுபட முயன்ற சத்துணவு ஊழியா்கள் கைது

சேலம்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட முயன்ற சத்துணவு ஊழியா்கள் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தினா் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலம் கோட்டை ... மேலும் பார்க்க

வேளாண் தொடா்பான கல்விச் சுற்றுலா: வாகனத்தை ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

சேலம்: வேளாண் துறையின் சாா்பில், அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவா்கள் அங்கக வேளாண்மை தொடா்பான கல்விச் சுற்றுலா செல்லும் வாகனத்தை ஆட்சியா் ரா.பிருந்தாதேவி புதன்கிழமை தொடங்கிவைத்தாா். இதி... மேலும் பார்க்க

நீட் தோ்வில் சாதனை: சூா்யா அகாதெமியில் பயிற்சிபெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழா

சேலம்: சூா்யா அகாதெமியில் பயிற்சிபெற்று எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிக்க தோ்வான மாணவ, மாணவிகளுக்கான பாராட்டு விழா அகாதெமியில் அண்மையில் நடைபெற்றது. சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் கடந்த 15 ஆண்டுகளாக ச... மேலும் பார்க்க

நடப்பாண்டில் 5-ஆவது முறையாக நிரம்பியது மேட்டூா் அணை!

மேட்டூா்: நடப்பாண்டில் மேட்டூா் அணை 5-ஆவது முறையாக முழுக்கொள்ளளவை எட்டியது. இதையடுத்து, காவிரிக் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மீண்டும் கனம... மேலும் பார்க்க

நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் அமைச்சா்கள் ஆய்வு

சேலம்: சேலத்தில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளை வரும் நவம்பருக்குள் விரைந்து முடித்து, பொதுமக்களுக்கான வீடு ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்க சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிற... மேலும் பார்க்க

காவிரி கரையோரப் பகுதி விவசாய நிலங்களில் வெள்ளநீா்!

சங்ககிரி: மேட்டூா் அணையிலிருந்து உபரிநீா் அதிக அளவில் திறந்துவிடப்பட்டதால், தேவூா் அருகே உள்ள காவிரி ஆற்றங்கரையோர பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், தேவூா் அருகே காவேரிபட்டி அக்ரஹாரம் ஊ... மேலும் பார்க்க