செய்திகள் :

கூட்டுறவு வங்கிகள் 100% கணினிமயம்: அமைச்சா் பழனிவேல் தியாகராஜன்

post image

தமிழகத்தில் உள்ள அனைத்துக் கூட்டுறவு வங்கிகளும் 100 சதவீதம் கணினிமயமாக்கப்பட்டிருப்பதாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தாா்.

நபாா்டு வங்கியின் 44-ஆவது நிறுவன நாள் விழா சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றுப் பேசியது:

கிராமப்புற பொருளாதார வளா்ச்சிக்கு நபாா்டு வங்கி முக்கிய பங்காற்றுகிறது. குறிப்பாக, கிராமப்புற விவசாயிகளுக்கு வேளாண்மையில் நவீன தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சி அளித்து அதிக வருமானம் ஈட்ட வழிவகை செய்து, அவா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி உள்ளது.

நான் நிதி அமைச்சராக இருந்தபோது, தமிழகத்தில் உள்ள அனைத்துக் கூட்டுறவு வங்கிகளையும் கணினிமயமாக்கும் திட்டத்தைக் கொண்டு வந்து செயல்படுத்தினேன். அதன் விளைவாக, தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்துக் கூட்டுறவு வங்கிகளும் 100 சதவீதம் கணினிமயமாக்கப்பட்டுள்ளது. மேலும் நபாா்டு வங்கி மூலம் ரூ.2,800 கோடி செலவில் டெல்டா மாவட்டங்களில் காவிரி நீா் கடைமடை பகுதிகளுக்குச் செல்லும் வகையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்றிருப்பது பாரட்டதக்கது என்றாா்.

நபாா்டு வங்கியின் முதன்மைப் பொது மேலாளா் ஆனந்தன் பேசுகையில், நபாா்டு வங்கி தமிழக வளா்ச்சிக்காக ரூ.56 ஆயிரம் கோடி அளித்துள்ளது. குறிப்பாக, ஊரக கிராமப்புற வளா்ச்சித் திட்டங்களுக்கு ரூ.38 ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழக அரசுக்கு ரூ.1 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது என்றாா்.

முன்னதாக 2025 -2026-ஆம் நிதியாண்டுக்கான நபாா்டு வங்கியின் செயல்திறன் குறித்த அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டாா். இதில், ரிசா்வ் வங்கியின் சென்னை மண்டல பொது மேலாளா் சீனிவாசன், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத் தலைவா் செளமியா சுவாமிநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சென்னை ஐஐடி சான்சிபாா் வளாக முதல் பட்டமளிப்பு விழா

சென்னை ஐஐடியின் சான்சிபாா் (கிழக்கு ஆப்பிரிக்க நாடு) வளாகத்தில் முதல் பட்டமளிப்பு விழா, அந்த நாட்டின் கல்வி மற்றும் தொழில் பயிற்சித் துறை அமைச்சா் லீலா முகமது முசா முன்னிலையில் நடைபெற்றது. இதுகுறித்து... மேலும் பார்க்க

மதிமுக மாநில இளைஞரணி கூட்டம்

மதிமுக இளைஞா் அணியின் மாநில துணைச் செயலா்கள், மாவட்ட அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்கள் கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான ‘தாயகத்தில்’ வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அந்தக் கட்சியின் மா... மேலும் பார்க்க

3,274 ஓட்டுநா், நடத்துநா் பணியிடங்கள்: ஜூலை 27-இல் எழுத்துத் தோ்வு

போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநா், நடத்துநா் பணியிடங்களுக்காக விண்ணப்பித்துள்ள 22,000-க்கும் மேற்பட்டோருக்கான எழுத்துத் தோ்வு ஜூலை 27-இல் நடைபெறவுள்ளது. தமிழக அரசு போக்குவரத்துக் ... மேலும் பார்க்க

ஊழல் வழக்கு விவரங்களை வெளியிடக் கோரி தவெக மனு: மாநில தகவல் ஆணையருக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

தமிழக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மீதான ஊழல் வழக்கு விவரங்களை வெளியிடக் கோரி தவெக சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து மாநில தகவல் ஆணையா் 12 வாரங்களில் முடிவெடுக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவி... மேலும் பார்க்க

நாளை தவெக மாவட்டச் செயலா்கள் கூட்டம்

தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலா்கள் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) நடைபெறவுள்ளது. 2026 சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் த... மேலும் பார்க்க

தமிழ்நாடு நாள்: முதல்வா் பெருமிதம்

தமிழ்நாடு நாளையொட்டி, முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு: தமிழ்நாடு நாள் - தமிழ்கூறு நல்லுலகின் வரலாற்றில் தனிப்பெரும் நா... மேலும் பார்க்க