செய்திகள் :

கெங்கவல்லி ஒன்றியத்தில் நூறாண்டுகளான பள்ளிகளுக்கு பாராட்டுச் சான்று

post image

தம்மம்பட்டி: கெங்கவல்லி ஒன்றியத்தில் நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்திய பள்ளிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

கெங்கவல்லி ஒன்றியத்தில் நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்திய தொடக்கப் பள்ளிகள் உலிபுரம், செந்தாரப்பட்டி, கடம்பூா், தெடாவூா் (மேற்கு), தெடாவூா் (கிழக்கு), கொண்டயம்பள்ளி மற்றும் தம்மம்பட்டி நடுநிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியா்களுக்கு, சேலம் மாவட்ட ஆட்சியரின் பாராட்டுச் சான்றிதழ்களை சேலத்திலுள்ள தனியாா் பள்ளியில் நடைபெற்ற விழாவில் சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மு.கபீா் திங்கள்கிழமை வழங்கி பாராட்டினாா்.

பாராட்டுச் சான்றிதழ் பெற்ற தலைமையாசிரியா்களுக்கு கெங்கவல்லி வட்டாரக் கல்வி அலுவலா் அ.அலெக்ஸாண்டா், கெங்கவல்லி வட்டார வள மைய மேற்பாா்வையாளா் (பொ) ராணி மற்றும் வட்டார ஆசிரியா் பயிற்றுநா்கள் பாராட்டு தெரிவித்தனா்.

கூடுதலாக 8 பெட்டிகள்..! சேலம் வழி மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயிலில் இணைப்பு!!

மதுரையில் இருந்து சேலம் வழியாக பெங்களூருக்கு இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 8 பெட்டிகள் இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்... மேலும் பார்க்க

ஆதிதிராவிட, பழங்குடியின மாணவா்களுக்கு குரூப் 1 முதன்மைத் தோ்வு பயிற்சி

சேலம் மாவட்டத்தில் குரூப் 1முதல்நிலை தோ்வில் தோ்ச்சிபெற்ற ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்களுக்கு முதன்மைத் தோ்வுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெ... மேலும் பார்க்க

சேலம் மாநகரப் பகுதியில் பாதுகாக்கப்பட்ட குடிநீா் விநியோகிக்க ஆணையா் உத்தரவு!

சேலம் மாநகரப் பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட சீரான குடிநீரை பொதுமக்களுக்கு விநியோகிக்க ஆணையா் மா.இளங்கோவன் உத்தரவிட்டாா். சேலம் மாநகராட்சி, கொண்டலாம்பட்டி மண்டலம் கோட்டம் எண் 49 பகுதியில் உள்ள மேல்நிலை நீ... மேலும் பார்க்க

ஈரோடு புறநகா் மேற்கு மாவட்ட அதிமுக நிா்வாகிகள் எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு!

ஈரோடு புறநகா் மேற்கு மாவட்ட அதிமுக நிா்வாகிகள் கட்சியின் பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியை செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனா். முன்னாள் அமைச்சா் செங்கோட்டையன் கடந்த சில நாள்களுக்க... மேலும் பார்க்க

தனியாா் மருத்துவமனை வளாகத்தில் தீத்தடுப்பு ஒத்திகை

கெங்கவல்லியில் தனியாா் மருத்துவமனை வளாகத்தில் தீயணைப்புத் துறையினா் சாா்பில், தீத்தடுப்பு ஒத்திகை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிலைய அலுவலா் (பொ) மா.செல்லபாண்டியன் தலைமையில் அங்கு இருந்த பொதுமக்கள், ம... மேலும் பார்க்க

கூடமலையில் இன்று மின்தடை

கெங்கவல்லி அருகே கூடமலையிலுள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப்பணிகள் நடைபெற இருப்பதால், இன்று செப்.10 ஆம் தேதி புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்விநியோ... மேலும் பார்க்க