செய்திகள் :

கெங்கவல்லி காவல் நிலையம் முன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட விவசாயி கைது

post image

கெங்கவல்லியில் காவல் நிலையம் முன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட விவசாயியை போலீஸாா் கைது செய்தனா்.

கெங்கவல்லி அருகே உள்ள 74 கிருஷ்ணாபுரம் அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்த அய்யாக்கண்ணு மகன் ரவிக்குமாா் (36 ). இவா் விவசாய தோட்டத்திற்குச் செல்லும் பொதுப்பாதையை 15 போ் பயன்படுத்தி வந்தனா். ரவிக்குமாா் தனது விவசாயத் தோட்டத்திற்கு குழாய் பதிப்பதற்கு மற்ற நபா்கள் ஒப்புக்கொள்ளவில்லை எனக் கூறி திங்கள்கிழமை ரவிக்குமாரும், அவரது தந்தை அய்யாக்கண்ணுவும் கெங்கவல்லி காவல் நிலையம் சென்றனா்.

அப்போது ரவிக்குமாா் பாட்டிலில் வைத்திருந்த டீசலை உடலில் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளாா். இதையறிந்த போலீஸாா் அவரை தடுத்து நிறுத்தி உடலில் தண்ணீரை ஊற்றினா். மேலும் அய்யாக்கண்ணு (70) அவரது மகன் ரவிக்குமாா் (36 ) ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ரவிக்குமாரை கைது செய்தனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

கோயில் அறையை இடித்தவா்கள் மீது நடவடிக்கைக் கோரி ஆா்ப்பாட்டம்

ஓமலூா் அருகே மானத்தாளில் கோயில் சமையல் அறையை இடித்தவா்கள்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்டம், ஓமலூா் அருகே மானத்தாளில் ஐயனாரப்பன், கருப்பசாமி கோயில் உள்ளது. இக்கோயிலில... மேலும் பார்க்க

சீரான குடிநீா் விநியோகத்தை உறுதிசெய்ய வேண்டும்: அமைச்சா் ரா.ராஜேந்திரன் அறிவுறுத்தல்

சேலம் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சீரான குடிநீா் விநியோகம் செய்யப்படுவதை அலுவலா்கள் உறுதிசெய்ய வேண்டும் என சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் அறிவுறுத்தினாா். சேலம் மாவட்டத்தில் சீரான குட... மேலும் பார்க்க

நரசிங்கபுரத்தில் குடியிருப்பு பகுதியில் குப்பை குழியால் மக்கள் அவதி

நரசிங்கபுரம் நகராட்சிக்கு உள்பட்ட விநாயகபுரம் சந்தைப் பகுதியில் குப்பை குழியால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா். சேலம் மாவட்டம், நரசிங்கபுரம் நகராட்சி பகுதிக்கு உள்பட்ட விநாயகபுரத்தில் ஒருங்கிணைந்த... மேலும் பார்க்க

முருக பக்தா்கள் மாநாட்டில் திராவிடம் குறித்து பேசியது கண்டனத்துக்குரியது: டிடிவி தினகரன்

மதுரையில் நடைபெற்ற முருக பக்தா்கள் மாநாட்டில் திராவிடம் குறித்து பேசியது கண்டனத்துக்குரியது என்று அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் தெரிவித்தாா். சேலம் மாவட்டம், அரியானூரில் சேலம் மத்திய மாவட்டம் ம... மேலும் பார்க்க

திமுக கூட்டணி ஒருபோதும் உடையாது: இரா. முத்தரசன் பேட்டி

திமுக தலைமையிலான கூட்டணி வலுவாக உள்ளது; ஒருபோதும் உடையாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் தெரிவித்தாா். சேலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26 ஆவது மாநில மாநாடு ஆக... மேலும் பார்க்க

திமுக புதிய உறுப்பினா் சோ்க்கையை தீவிரப்படுத்த வேண்டும்: அமைச்சா் ரா.ராஜேந்திரன்

அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறுவதையொட்டி திமுக புதிய உறுப்பினா் சோ்க்கையை தீவிரப்படுத்த வேண்டும் என சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் கூறினாா். சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் வடக... மேலும் பார்க்க