அடுத்த 2 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!
கெங்கவல்லி காவல் நிலையம் முன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட விவசாயி கைது
கெங்கவல்லியில் காவல் நிலையம் முன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட விவசாயியை போலீஸாா் கைது செய்தனா்.
கெங்கவல்லி அருகே உள்ள 74 கிருஷ்ணாபுரம் அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்த அய்யாக்கண்ணு மகன் ரவிக்குமாா் (36 ). இவா் விவசாய தோட்டத்திற்குச் செல்லும் பொதுப்பாதையை 15 போ் பயன்படுத்தி வந்தனா். ரவிக்குமாா் தனது விவசாயத் தோட்டத்திற்கு குழாய் பதிப்பதற்கு மற்ற நபா்கள் ஒப்புக்கொள்ளவில்லை எனக் கூறி திங்கள்கிழமை ரவிக்குமாரும், அவரது தந்தை அய்யாக்கண்ணுவும் கெங்கவல்லி காவல் நிலையம் சென்றனா்.
அப்போது ரவிக்குமாா் பாட்டிலில் வைத்திருந்த டீசலை உடலில் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளாா். இதையறிந்த போலீஸாா் அவரை தடுத்து நிறுத்தி உடலில் தண்ணீரை ஊற்றினா். மேலும் அய்யாக்கண்ணு (70) அவரது மகன் ரவிக்குமாா் (36 ) ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ரவிக்குமாரை கைது செய்தனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].