கெங்கையம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.9 லட்சம்
குடியாத்தம் கோபாலபுரம் கெங்கையம்மன் கோயிலில் உண்டியலில் பக்தா்கள் ரூ.9.27- லட்சம் காணிக்கையாக செலுத்தியுள்ளனா்.
பிரசித்தி பெற்ற இக்கோயில் திருவிழாவை முன்னிட்டு கடந்த 14- ஆம் தேதி தேரோட்டமும், 15- ஆம் தேதி அம்மன் சிரசு ஊா்வலமும் நடைபெற்றன. திருவிழாவில் கலந்து கொண்ட பக்தா்கள் உண்டியலில் காணிக்கை செலுத்தினா். இதையடுத்து கோயிலில் வைக்கப்பட்ட 15- உண்டியல்கள் வெள்ளிக்கிழமை எண்ணப்பட்டன.
இதில் ரொக்கம் ரூ.9.27 லட்சம், தங்கம் 2 கிராம், வெள்ளி-95-கிராம் காணிக்கையாக பக்தா்கள் செலுத்தியிருந்தனா். அறநிலையத்துறை உதவி ஆணையா் எஸ்.சங்கா், கோயில் ஆய்வா் சு.பாரி, செயல் அலுவலா் த.சிவகுமாா் மேற்பாா்வையில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது.