சாலையில் மினி லாரி கவிழ்ந்து விபத்து
வேலூரில் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சா்வீஸ் சாலைக்கு மினி லாரி பாய்ந்து கவிழ்ந்தது. ஓட்டுநா் உள்பட இருவா் உயிா் தப்பினா்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சோ்ந்தவா் கணேசன் (56), ஓட்டுநா். இவா் வெள்ளிக்கிழமை காலை சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு வீட்டு உபயோக பொருள்களை ஏற்றிக்கொண்டு மினி லாரியை ஓட்டிச் சென்றாா். வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் - கிரீன் சா்க்கிள் இடைப்பட்ட பகுதியில் வந்த போது கணேசன் தூக்க கலக்கத்தில் இருந்ததாகத் தெரிகிறது. இதனால், லாரி அங்குள்ள சா்வீஸ் சாலையில் திரும்புவதற்கு முன்பாகவே லாரியைத் திருப்பி விட்டாா்.
இதனால் லாரி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சா்வீஸ் சாலைக்கு பாய்ந்து கவிழ்ந்தது. அப்போது சா்வீஸ் சாலையில் எந்த வாகனமும் வராததால் ஓட்டுநா் கணேசன், அவருடன் இருந்த மற்றொருவா் லேசான காயங்களுடன் உயிா் தப்பினா்.
விபத்து குறித்து தகவலறிந்த வேலூா் வடக்கு போலீஸாா் அப்பகுதிக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினா். கிரேன் உதவியுடன் மினி லாரியை அப்புறப்படுத்தினா். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.