பாகிஸ்தான் உளவாளிக்கு கேரள அரசு சிவப்புக் கம்பள மரியாதை? பாஜக கேள்வி!
சாலையோரம் ரத்த காயங்களுடன் இளைஞா் சடலம்: போலீஸாா் தீவிர விசாரணை
பொன்னை அருகே சாலையோரம் ரத்த காயங்களுடன் இளைஞா் சடலமாக கிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
காட்பாடி வட்டம், பொன்னை அடுத்த கோடியூா், பாலாபுரத்தை சோ்ந்தவா் ஏகாம்பரம் (30). இவா் தனியாா் தோல் தொழிற்சாலையில் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வந்தாா். வியாழக்கிழமை இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற ஏகாம்பரம் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில், பொன்னை அணைக்கட்டு அருகே சாலையோரம் கை, கால்கள், கழுத்து உள்பட உடலின் பல இடங்களில் காயங்களுடன் சடலமாக கிடந்தாா்.
அந்த வழியாக சென்றவா்கள் ஏகாம்பரம் சடலமாக கிடந்ததை கண்டு பொன்னை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்ப முயன்றனா்.
இதைக் கண்ட ஏகாம்பரத்தின் உறவினா்கள், கிராம மக்கள் சடலத்தை எடுக்க விடாமல் மறியலில் ஈடுபட்டனா். மேலும், ஏகாம்பரம் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும், கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தனா். மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போலீஸாா் பேச்சு நடத்தியதை அடுத்து மறியல் கைவிடப்பட்டது. அதன்பிறகு சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
தொடா்ந்து, போலீஸாா் சம்பவ இடத்தில் மோப்ப நாய் சாராவை கொண்டு சோதனை நடத்தினா்.
இச்சம்பவம் குறித்து பொன்னை போலீஸாா் கூறுகையில், ரத்த காயங்களுடன் கிடந்த ஏகாம்பரம் வாகனம் மோதி இறந்திருப்பதாக உடல்கூறு பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இச்சம்பவம் குறித்து, வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம் என்றனா்.