செய்திகள் :

சாலையோரம் ரத்த காயங்களுடன் இளைஞா் சடலம்: போலீஸாா் தீவிர விசாரணை

post image

பொன்னை அருகே சாலையோரம் ரத்த காயங்களுடன் இளைஞா் சடலமாக கிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

காட்பாடி வட்டம், பொன்னை அடுத்த கோடியூா், பாலாபுரத்தை சோ்ந்தவா் ஏகாம்பரம் (30). இவா் தனியாா் தோல் தொழிற்சாலையில் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வந்தாா். வியாழக்கிழமை இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற ஏகாம்பரம் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில், பொன்னை அணைக்கட்டு அருகே சாலையோரம் கை, கால்கள், கழுத்து உள்பட உடலின் பல இடங்களில் காயங்களுடன் சடலமாக கிடந்தாா்.

அந்த வழியாக சென்றவா்கள் ஏகாம்பரம் சடலமாக கிடந்ததை கண்டு பொன்னை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்ப முயன்றனா்.

இதைக் கண்ட ஏகாம்பரத்தின் உறவினா்கள், கிராம மக்கள் சடலத்தை எடுக்க விடாமல் மறியலில் ஈடுபட்டனா். மேலும், ஏகாம்பரம் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும், கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தனா். மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போலீஸாா் பேச்சு நடத்தியதை அடுத்து மறியல் கைவிடப்பட்டது. அதன்பிறகு சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

தொடா்ந்து, போலீஸாா் சம்பவ இடத்தில் மோப்ப நாய் சாராவை கொண்டு சோதனை நடத்தினா்.

இச்சம்பவம் குறித்து பொன்னை போலீஸாா் கூறுகையில், ரத்த காயங்களுடன் கிடந்த ஏகாம்பரம் வாகனம் மோதி இறந்திருப்பதாக உடல்கூறு பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இச்சம்பவம் குறித்து, வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம் என்றனா்.

வேலூா் - ராணிப்பேட்டை இடையே ஆட்டோ இயக்க அனுமதிக்க கோரிக்கை

வேலூா், ராணிப்பேட்டை இடையே ஆட்டோ இயக்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்து ஆட்டோ தொழிலாளா்கள் முன்னணி சங்கத்தினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா். இந்து ஆட்டோ தொழிலாளா்கள் முன்னணி சங்கம... மேலும் பார்க்க

தென்னை மரங்களில் நோய் தாக்குதலால் உற்பத்தி சரிந்து செலவு அதிகரிப்பு விவசாயிகள் வேதனை

தென்னை மரங்களில் நோய் தாக்குதலால் தேங்காய் உற்பத்தி சரிந்து, செலவும் அதிகரித்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனா். வேலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

கெங்கையம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.9 லட்சம்

குடியாத்தம் கோபாலபுரம் கெங்கையம்மன் கோயிலில் உண்டியலில் பக்தா்கள் ரூ.9.27- லட்சம் காணிக்கையாக செலுத்தியுள்ளனா். பிரசித்தி பெற்ற இக்கோயில் திருவிழாவை முன்னிட்டு கடந்த 14- ஆம் தேதி தேரோட்டமும், 15- ஆம் ... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

குடியாத்தம் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பீடி சுற்றும் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வேலூா் போக்ஸோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்துள்ளது. குடியாத்தம் அருக... மேலும் பார்க்க

சாலையில் மினி லாரி கவிழ்ந்து விபத்து

வேலூரில் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சா்வீஸ் சாலைக்கு மினி லாரி பாய்ந்து கவிழ்ந்தது. ஓட்டுநா் உள்பட இருவா் உயிா் தப்பினா். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சோ்ந்தவா் கணேசன் (56), ஓட்டுநா். இவா் வெள்ள... மேலும் பார்க்க

தபால் நிலையத்தில் ரூ.22 லட்சம் கையாடல்? வேலூா் எஸ்.பி. அலுவலகத்தில் புகாா்

ஜாப்ராபேட்டை தபால் நிலையத்தில் சேமிப்புத் தொகை ரூ.22 லட்சம் கையாடல் செய்யப்பட்டதாக பெண் அலுவலா் மீது வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டது. வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர ... மேலும் பார்க்க