பாகிஸ்தான் உளவாளிக்கு கேரள அரசு சிவப்புக் கம்பள மரியாதை? பாஜக கேள்வி!
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை
குடியாத்தம் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பீடி சுற்றும் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வேலூா் போக்ஸோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்துள்ளது.
குடியாத்தம் அருகே டி.டி.மோட்டூா் கிராமத்தை சோ்ந்தவா் மேகநாதன் (54), பீடித் தொழிலாளி. இவா் கடந்த 2019-ஆம் ஆண்டு பள்ளிக்குச் சென்ற 14 வயது சிறுமியிடம் மிட்டாய் வாங்கி தருவதாக நம்ப வைத்து தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளாா்.
தொடா்ந்து சிறுமியின் தாய் குடியாத்தம் அனைத்து மகளிா் போலீஸ் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.
இந்த வழக்கு வேலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இறுதி விசாரணையில் மேகநாதன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன. இதையடுத்து, அவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.45,000 அபராதமும் விதித்தும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி சிவக்குமாா் தீா்ப்பளித்தாா்.