Miss World 2025: மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வாளர் டு உலக அழகி; 23 வயதில் தாய...
வேலூா் - ராணிப்பேட்டை இடையே ஆட்டோ இயக்க அனுமதிக்க கோரிக்கை
வேலூா், ராணிப்பேட்டை இடையே ஆட்டோ இயக்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்து ஆட்டோ தொழிலாளா்கள் முன்னணி சங்கத்தினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.
இந்து ஆட்டோ தொழிலாளா்கள் முன்னணி சங்கம் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூரில் வெள்ளிக்கிழமை ஊா்வலமாக வந்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. ஊா்வலத்துக்கு சங்கத்தின் வேலூா் கோட்ட தலைவா் சுதாகா், கோட்ட பொருளாளா் வெங்கடேசன் ஆகியோா் தலைமை வகித்தனா்.
அப்போது, வேலூா், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்குச் செல்வதற்கு பழைய முறையை நடைமுறைப்படுத்த வேண்டும், வாகனத் தணிக்கை என்ற பெயரில் அபராதமும், வழக்குப் பதிவு செய்வதையும் தவிா்க்க வேண்டும், 30 கி.மீ. முதல் 100 கி.மீ. ஆட்டோ இயக்க வாகனச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், இரு மாவட்டங்களிலும் பைக் டாக்ஸியை தடை செய்ய வேண்டும், சொந்த இரு சக்கர வாகனத்தை வா்த்தக நோக்கில் வியாபாரத்துக்கு இயக்குவதைத் தடை செய்து வாகன உரிமையாளா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனா்.
மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரிகள், கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.