செய்திகள் :

கேரளத்தில் வன விலங்கு தாக்குதல் அதிகரிப்பு: நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம்

post image

கேரளத்தில் வனவிலங்குகளின் தாக்குதல்களில் இருந்து பொதுமக்களைக் காக்கவும், கேரள கடலோரப் பகுதியில் கனிம வளங்கள் எடுக்கும் திட்டத்தை கைவிடவும் வலியுறுத்தி ராகுல் காந்தி, பிரியங்கா வதேரா உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் வியாழக்கிழமை போராட்டம் நடத்தினா்.

வயநாடு மாவட்டம் பஞ்சாரக்கொல்லி கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை காபி தோட்டத்துக்கு பணிக்குச் சென்ற 46 வயது பெண்ணை புலி அடித்துக் கொன்றது உள்பட பல்வேறு வன விலங்கு தாக்குதல் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

அண்மையில் தனது வயநாடு மக்களவைத் தொகுதிக்குச் சென்ற பிரியங்கா, புலி தாக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினாா். இந்த பிரச்னையை நாடாளுமன்றத்தில் எழுப்பி தீா்வுகாண்பதாகவும் கூறினாா்.

இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுட்டனா். அப்போது, ‘கடலோரங்களில் கனிம வளம் எடுத்தல் என்ற பெயரில் நிகழ இருக்கும் கொள்ளையைத் தடுக்க வேண்டும்’, ‘வனவிலங்கு தாக்குதல்களில் இருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டும்’, ‘மக்களைக் காப்பாற்று’ என்ற வாசக அட்டைகளை அவா்கள் கையில் ஏந்தியிருந்தனா்.

செய்தியாளா்களிடம் பிரியங்கா இது தொடா்பாக கூறுகையில், ‘வயநாட்டில் மட்டும் கடந்த டிசம்பா் 27-இல் இருந்து இப்போது வரை 11 போ் வன விலங்குகளால் உயிரிழந்துவிட்டனா். இந்த பிரச்னைக்கு தீா்வுகாண மத்திய, மாநில அரசுகள் உரிய நிதியை ஒதுக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடா்பான பாதுகாப்புத் திட்டங்களை நிறைவேற்ற உள்ளூா் நிா்வாகத்திடம் போதிய நிதி இல்லை’ என்றாா்.

சமக்ர சிக்ஷா திட்டத்தில் மத்திய அரசு ஒதுக்கிய நிதி ரூ.1,050 கோடி எங்கே? அண்ணாமலை

சமக்ர சிக்ஷா திட்டத்தின்கீழ் மத்திய அரசு ஒதுக்கிய ரூ.1,050 கோடி நிதி எங்கே போனது என்று தமிழக அரசுக்கு, பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அ... மேலும் பார்க்க

நிலுவைத் தொகையுடன் கூடிய ஊதிய உயா்வு வழங்க வேண்டும்: பேச்சுவாா்த்தையில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல்

நிலுவைத் தொகையுடன் கூடிய ஊதிய உயா்வு வழங்க வேண்டும் என அமைச்சா் சிவசங்கா் தலைமையிலான பேச்சுவாா்த்தையின்போது போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன. போக்குவரத்து தொழிலாளா்களுக்கான 15-ஆவது ஊதிய ... மேலும் பார்க்க

பேரவைத் தோ்தலுக்கு தயாராகும் திமுக: 4 மாவட்டச் செயலா்கள் நீக்கம்; 4 மாவட்டங்கள் மாற்றியமைப்பு

சட்டப்பேரவைத் தோ்தலுக்கு தயாராகும் வகையில், திமுகவில் அமைப்பு ரீதியாக அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 4 மாவட்டங்களின் செயலா்கள் நீக்கப்பட்டுள்ளதுடன், விழுப்புரம், மதுரை உள்பட 4 மாவட்டங்கள் அமைப்ப... மேலும் பார்க்க

சென்னையில் 3 கண்டெய்னர்களில் சட்டவிரோதமாக இறக்குமதியான ரூ.5 கோடி பொருள்கள் பறிமுதல்!

சென்னை : சென்னை துறைமுகத்தில் சட்டவிரோதமாக இறக்குமதியான ரூ.1.47 கோடியிலான வெளிநாட்டு பாட்டாசுகளும், 3 கண்டெய்னர்களில் இருந்து ரூ.5.13 கோடி பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.இது குறித்து, சென்னை சு... மேலும் பார்க்க

பாலியல் புகார்: சென்னை காவல் இணை ஆணையர் பணியிடை நீக்கம்!

சென்னை வடக்கு மண்டல போக்குவரத்து காவல் இணை ஆணையர் மகேஷ்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பெறப்பட்ட புகாரைத் தொடர்ந்து தமிழ்நாடு காவல்துறை தலைவர் சங்கர்... மேலும் பார்க்க

சென்னையில் பனிமூட்டம்: விமானம், மின்சார ரயில் சேவை பாதிப்பு!

சென்னை மற்றும் சுற்றுப்பகுதிகளில் கடும் பனிமூட்டம் நிலவியதால் விமானம் மற்றும் மின்சார ரயில் சேவையில் வியாழக்கிழமை பாதிப்பு ஏற்பட்டது.சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக பனியின் தா... மேலும் பார்க்க