செய்திகள் :

கேரளத்துக்கு அமித் ஷா வருகை! 3 நாள்களுக்கு ட்ரோன்கள் பறக்கத் தடை!

post image

கேரளத்தின் கண்ணூர் மாவட்டத்துக்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருவதால், அங்குள்ள விமான நிலையத்தைச் சுற்றிலும் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் ஆகியவை பறக்க அடுத்த 3 நாள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கண்ணூர் மாவட்டத்திற்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை (ஜூலை 12) விமானம் மூலம் வருகை தருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து, 3 நாள்களுக்கு கண்ணூர் விமான நிலையத்திலிருந்து 5 கி.மீ. சுற்றளவுக்கு ட்ரோன்கள், பாராகிளைடர்கள், ராட்சச பலூன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் பறக்க மாவட்ட ஆட்சியர் கே. விஜயன் தடை விதித்துள்ளார்.

இதுகுறித்து, இன்று (ஜூலை 11) வெளியிடப்பட்ட அறிக்கையில், விமானம் பறப்பதற்கு அல்லது தரையிறங்குவதற்கு இடையூறாக அமையக்கூடிய நடவடிக்கைகள் குறித்து அருகிலுள்ள காவல் நிலையத்துக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், உள்துறை அமைச்சரின் வருகையைப் பற்றி வெளியான அறிக்கையில், தில்லி திரும்பும் முன்னர் கண்ணூரிலுள்ள பிரபல ராஜராஜேஸ்வரா கோயிலுக்கு அவர் செல்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Due to the arrival of Union Home Minister Amit Shah in Kannur district of Kerala, the flying of drones and unmanned aircraft around the airport there has been banned for the next 3 days.

இதையும் படிக்க: ரூ.37.5 லட்சம் வெகுமதி! சத்தீஸ்கரில் 22 நக்சல்கள் சரண்!

ஒட்டுமொத்த அலட்சியம்! ஆர்சிபி கூட்டநெரிசல் குறித்த அறிக்கை தாக்கல்!!

பெங்களூரில், ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தின் போது நேரிட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான சம்பவத்துக்கு ஒட்டுமொத்த அலட்சியமே காரணம் என விசாரணை அறிக்கையில் தகவல்.ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கோப... மேலும் பார்க்க

ரூ.1.18 கோடி வெகுமதி: சத்தீஸ்கரில் 23 நக்சல்கள் சரண்!

சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் 23 நக்சல்கள் இன்று (ஜூலை 12) சரணடைந்துள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார் சரணடைந்த நக்சலைட்டுகளில் 11 மூத்த நக்சல்கள் ஆவார். அவர்களில் பெரும்ப... மேலும் பார்க்க

சாலைகளில் ஓடும் படகுகள்.. மத்திய பிரதேசத்தில் கரையைக் கடந்த மந்தாகினி ஆறு

போபால்: மத்திய பிரதேசத்தில் பெய்த கனமழை காரணமாக, மந்தாகினி ஆறு கரையை கடந்து பாய்ந்ததால், பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து சாலைகளில் படகுகள் நீந்திச் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.ராம்கட், ஜான்... மேலும் பார்க்க

தில்லியில் 4 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது: 8 பேர் காயம்!

வடகிழக்கு தில்லியின் வெல்கம் பகுதியில் நான்கு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் ஒரு வயதுக் குழந்தை உள்பட 8 பேர் காயமடைந்தனர். சம்பவ நடைபெற்ற இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றது. மேலும் பார்க்க

ஏர் இந்தியா விமான விபத்து: மேடே அழைப்புக்கு முன் நடந்தது என்ன? இறுதி வினாடிகள்

புது தில்லி: அகமதாபாத் ஏா் இந்தியா விமான விபத்து தொடா்பாக விசாரித்து வரும் விமான விபத்து புலனாய்வு அமைப்பு (ஏஏஐபி) அதன் முதல்கட்ட அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறது.கடந்த ஜூன் 12ஆம் தேதி, குஜராத் மாநில... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் வென்றால் ஆட்சியில் பாஜக பங்கு பெறும்: அமித் ஷா அறிவிப்பு

தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் ஆட்சியில் பாஜக பங்கு பெறும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதளுக்கு அளித்த நேர்காணலில் அமை... மேலும் பார்க்க