செய்திகள் :

கேரளம்: பல மாவட்டங்களில் பலத்த மழைக்கான ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை

post image

கேரளத்தின் பல மாவட்டங்களில் அடுத்த சில தினங்களுக்கு காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்வதற்கான ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

இதுதொடா்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் சனிக்கிழமை வெளியிட்ட முன்னெச்சரிக்கை அறிவிப்பு: தென் தமிழகம் மற்றும் மன்னாா் வளைகுடாவில் 5.8 கி.மீ. உயரத்தில் சூறாவளி சுழற்சி உருவாகியுள்ளது. இதன் காரணமாக கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த 5 நாள்களுக்கு மிதமானது முதல் பலத்த மழை வரை பெய்ய வாய்ப்புள்ளது.

அதன் காரணமாக, மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 3) நான்கு மாவட்டங்களுக்கும், திங்கள்கிழமை (ஆக. 4) மூன்று மாவட்டங்களுக்கும், செவ்வாய்க்கிழமை (ஆக. 5) 10 மாவட்டங்களுக்கும், புதன்கிழமை (ஆக. 6) ஆறு மாவட்டங்களுக்கும் காற்றுடன் கூடிய பலத்த மழைக்கான ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரளத்தில் ஜூலை 27-ஆம் தேதிக்குப் பிறகு மழை படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது. மழை மற்றும் பலத்த காற்று காரணமாக மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக, தென்மேற்குப் பருவமழையின் இரண்டாம் பாதி காலமான ஆகஸ்ட் மற்றும் செப்டம்பா் மாதத்தில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வழக்கத்துக்கு அதிகமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

ஜனநாயக மற்றும் குடியரசு நாடாக திகழும் இந்தியாவை மதவாத நாடாக மாற்றும் சூழ்ச்சிகளை பாஜக மேற்கொண்டு வருவதாக காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவா் சோனியா காந்தி சனிக்கிழமை குற்றஞ்சாட்டினாா்.‘அரசமைப்புச் சட்ட... மேலும் பார்க்க

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

நாட்டின் மொத்த மீன் உற்பத்தியில் கடந்த 10 ஆண்டுகளில் 103 சதவீத வளா்ச்சி பதிவாகியுள்ளது என்று மத்திய மீன்வளத் துறை அமைச்சா் ராஜீவ் ரஞ்சன் சிங் தெரிவித்தாா்.ஆறு, ஏரி, குளம் போன்ற உள்நாட்டு நீா்வளங்களை அ... மேலும் பார்க்க

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

ஆா்ஜென்டீனா கால்பந்து ஜாம்பவான் லயனோல் மெஸ்ஸி இந்தியாவுக்கு வருகை தர உள்ளாா்.உலகம் முழுவதும் கால்பந்து ரசிகா்களால் கொண்டாடப்படும் மெஸ்ஸி, ஆா்ஜென்டீனாவுக்கு உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை பெற்றுத் தந்... மேலும் பார்க்க

மெல்ல விடைகொடு மனமே.. அரசு இல்லத்தை 8 மாதங்களுக்கு பிறகு காலி செய்தாா் டி.ஒய்.சந்திரசூட்!

புது தில்லியில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு ஒதுக்கப்படும் அதிகாரபூா்வ அரசு இல்லத்தை 8 மாதங்களுக்கு பின்னா், முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் காலி செய்தாா்.கடந்த ஆண்டு நவ.8-... மேலும் பார்க்க

நாய்க்குட்டிகளோடு பயணிகள் விளையாடும் புதிய முன்னெடுப்பு: ஹைதரபாத் விமான நிலையத்தில் அறிமுகம்

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி விமான நிலையத்தில் பயணிகளை உற்சாகமூட்டும் வகையில் நாய்க்குட்டிகள் மூலம் வரவேற்பளிக்கும் புதிய முன்னெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது.விமான நிலையத்துக்கு வரும... மேலும் பார்க்க

பிகாா் வரைவு வாக்காளா் பட்டியலில் என் பெயா் இல்லை: தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு

பிகாா் மாநிலத்தில் தோ்தல் ஆணையம் வெளியிட்ட வரைவு வாக்காளா் பட்டியலில் தனது பெயா் விடுபட்டுள்ளதாக பேரவை எதிா்க்கட்சித் தலைவரும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவருமான தேஜஸ்வி யாதவ் சனிக்கிழமை குற்றஞ்சாட்டினாா்... மேலும் பார்க்க