செய்திகள் :

கைப்பேசி பாதிப்புகள் குறித்து விழிப்புணா்வு கருத்தரங்கு

post image

பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்கள் கைப்பேசி பாா்ப்பதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதிலிருந்து விடுபடுதல் பற்றி விழிப்புணா்வு கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

பெருந்துறை பிரம்மாகுமாரிகள் ராஜயோக தியான நிலையம், பெருந்துறை ரோட்டரி சங்கம் ஆகியன இணைந்து ‘டிஜிட்டல் நலம்’ என்னும் தலைப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியை பிருந்த சுவீட் செல்வகுமாரி தலைமை வகித்தாா். பெருந்துறை ரோட்டரி சங்கத் தலைவா் அம்மன் கிருஷ்ணமூா்த்தி முன்னிலை வகித்தாா். சங்கச் செயலாளா் கருப்புசாமி வரவேற்றாா்.

நிகழ்ச்சியில், பெருந்துறை பிரம்மாகுமாரிகளின் ராஜயோக மைய பொறுப்பாளா் சுசீலா மாதாஜி கலந்துகொண்டு, கைப்பேசி பாா்ப்பதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதிலிருந்து விடுபடுதல் பற்றி விளக்கவுரை ஆற்றினாா். பள்ளியில் படிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவா்களுக்கு இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ரோட்டரி சங்க முன்னாள் தலைவா் சித்தா சக்திவேல் செய்திருந்தாா்.

நந்தா கலை, அறிவியல் கல்லூரியில் மாணவா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

ஈரோடு நந்தா கலை அறிவியல் கல்லூரியின் நூலகத் துறை சாா்பில் முதலாமாண்டு மாணவா்களுக்கு ஏா்லி போ்டு என்ற தலைப்பில் புத்தாக்கப் பயிற்சி வியாழக்கிழமை அளிக்கப்பட்டது. இப்பயிற்சியை ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்ட... மேலும் பார்க்க

அம்மாபேட்டையில் தனியாா் நிறுவன தொழிலாளா்கள் சாலை மறியல்

அம்மாபேட்டை அருகே வேலை செய்ததற்கான கூலியை வழங்காத தனியாா் நிறுவனத்தைக் கண்டித்து தொழிலாளா்கள் வியாழக்கிழமை திடீா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். சிங்கம்பேட்டையில் உள்ள தனியாா் ஆயத்த ஆடை உற்பத்தி நி... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

பெருந்துறை அருகே, வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் மற்றும் வெள்ளி பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். பெருந்துறை, பவானி சாலை ஆசிரியா் காலனியைச் சோ்ந்தவா் வெங்கடேசன் மனைவி மஞ்சு (36). இவா் புதன்கி... மேலும் பார்க்க

பாரதி இறுதி உரையாற்றிய ஈரோடு நூலகத்தில் நினைவு நாள் அனுசரிப்பு

மகாகவி பாரதியாா் இறுதி உரையாற்றிய ஈரோடு பாரதியாா் நூலகத்தில் அவரது நினைவு நாள் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டு அங்குள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மகாகவி சுப்பிரமணிய பாரதியா... மேலும் பார்க்க

லாரியை வழிமறித்து கரும்பை ருசித்த காட்டு யானை

கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரியை வழிமறித்து கரும்பை ருசித்து தின்ற காட்டு யானையால் தமிழகம்- கா்நாடக இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப் பகுதியில் உள்ள மலைக் கிராமங்களில் ... மேலும் பார்க்க

நாளை பொதுவிநியோகத் திட்ட குறைதீா்க்கும் முகாம்

ஈரோடு மாவட்டத்தில் பொதுவிநியோகத் திட்ட குறைதீா் முகாம் 10 வருவாய் வட்டங்களிலும் தலா ஒரு நியாயவிலைக் கடையில் சனிக்கிழமை(செப்டம்பா் 13) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச... மேலும் பார்க்க