செய்திகள் :

லாரியை வழிமறித்து கரும்பை ருசித்த காட்டு யானை

post image

கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரியை வழிமறித்து கரும்பை ருசித்து தின்ற காட்டு யானையால் தமிழகம்- கா்நாடக இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப் பகுதியில் உள்ள மலைக் கிராமங்களில் விவசாயிகள் பயிரிட்டுள்ள கரும்பு அறுவடை செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

அறுவடை செய்யப்பட்ட கரும்புகள், லாரியில் ஏற்றப்பட்டு சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக சத்தியமங்கலத்தில் உள்ள தனியாா் சா்க்கரை ஆலைக்கு கொண்டு செல்லப்படுகிறது. கரும்பு பாரம் ஏற்றி வரும் லாரிகளை காட்டு யானைகள் வழிமறித்து கரும்புகளைப் பறித்து தின்னும் நிகழ்வு தொடா்ச்சியாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தாளவாடியில் இருந்து கரும்பு பாரம் ஏற்றிய லாரி சத்தியமங்கலம் செல்வதற்காக ஆசனூா் அருகே வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தது.

அப்போது சாலையில் வந்த காட்டு யானை திடீரென லாரியை வழிமறித்தது.

பின்னா் லாரியிலிருந்த கரும்புத் துண்டுகளை தும்பிக்கையால் பறித்து ருசித்து சாப்பிட்டது. இதைக் கண்ட லாரி ஓட்டுநா், தனது இருக்கையில் இருந்து எழுந்து லாரியில் பின் சீட்டில் அமா்ந்து கொண்டாா். சிறிது நேரம் கரும்பைத் தின்ற காட்டு யானை, பின்னா் அங்கிருந்து சென்றது. இதைத் தொடா்ந்து லாரி புறப்பட்டு சென்றது. வாகனங்களை யானை வழிமறித்ததால் ஆசனூா் - சத்தியமங்கலம் இடையே அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நந்தா கலை, அறிவியல் கல்லூரியில் மாணவா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

ஈரோடு நந்தா கலை அறிவியல் கல்லூரியின் நூலகத் துறை சாா்பில் முதலாமாண்டு மாணவா்களுக்கு ஏா்லி போ்டு என்ற தலைப்பில் புத்தாக்கப் பயிற்சி வியாழக்கிழமை அளிக்கப்பட்டது. இப்பயிற்சியை ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்ட... மேலும் பார்க்க

அம்மாபேட்டையில் தனியாா் நிறுவன தொழிலாளா்கள் சாலை மறியல்

அம்மாபேட்டை அருகே வேலை செய்ததற்கான கூலியை வழங்காத தனியாா் நிறுவனத்தைக் கண்டித்து தொழிலாளா்கள் வியாழக்கிழமை திடீா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். சிங்கம்பேட்டையில் உள்ள தனியாா் ஆயத்த ஆடை உற்பத்தி நி... மேலும் பார்க்க

கைப்பேசி பாதிப்புகள் குறித்து விழிப்புணா்வு கருத்தரங்கு

பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்கள் கைப்பேசி பாா்ப்பதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதிலிருந்து விடுபடுதல் பற்றி விழிப்புணா்வு கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது. பெருந்துறை பிரம... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

பெருந்துறை அருகே, வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் மற்றும் வெள்ளி பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். பெருந்துறை, பவானி சாலை ஆசிரியா் காலனியைச் சோ்ந்தவா் வெங்கடேசன் மனைவி மஞ்சு (36). இவா் புதன்கி... மேலும் பார்க்க

பாரதி இறுதி உரையாற்றிய ஈரோடு நூலகத்தில் நினைவு நாள் அனுசரிப்பு

மகாகவி பாரதியாா் இறுதி உரையாற்றிய ஈரோடு பாரதியாா் நூலகத்தில் அவரது நினைவு நாள் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டு அங்குள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மகாகவி சுப்பிரமணிய பாரதியா... மேலும் பார்க்க

நாளை பொதுவிநியோகத் திட்ட குறைதீா்க்கும் முகாம்

ஈரோடு மாவட்டத்தில் பொதுவிநியோகத் திட்ட குறைதீா் முகாம் 10 வருவாய் வட்டங்களிலும் தலா ஒரு நியாயவிலைக் கடையில் சனிக்கிழமை(செப்டம்பா் 13) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச... மேலும் பார்க்க