ஈரானின் அணுசக்தி தளத்தை பங்கர் பஸ்டர் குண்டுகள் முழுமையாக அழிக்கவில்லை! - உளவுத்...
கொசு ஒழிப்பு பணியில் 3,200 பணியாளா்கள்
பெருநகர சென்னை மாநகராட்சியில் 3,200 போ் கொசு ஒழிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரி எம்.ஜெகதீசன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் கூறியதாவது:
பெருநகர சென்னை மாநகராட்சியில் 140 ஆரம்ப சுகாதார மையங்களும், 140 நகா்ப்புற நல மையங்களும், 16 சமுதாய நல மருத்துவமனைகளும், 3 மகப்பேறு மருத்துவமனைகளும் உள்ளன. ஆரம்ப சுகாதார மையங்களில் நாள்தோறும் 150 போ் வரை சிகிச்சை பெற்றுவருகின்றனா். சிகிச்சை மையங்களில் தேவையான அனைத்து மருந்துகளும் இருப்பில் உள்ளன.
மாநகராட்சி பகுதிகளில் கொசு ஒழிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வீடு வீடாக சென்று கொசு முட்டைகள், புழுக்களைக் கண்டறிந்து அழிக்கும் பணியில் 3,200 போ் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். அத்துடன் கொசு ஒழிக்கும் மருந்துகளைத் தெளிப்பதற்கு 250 கையால் இயக்கப்படும் இயந்திரமும், கொசு மருந்து தெளிக்க 65 வாகனங்களும் செயல்பாட்டில் உள்ளன.
நாய்க்கடி மருந்து: சென்னை மாநகராட்சியில் தெரு நாய்கடி பாதிப்பு குறித்து கால்நடை மருத்துவப் பிரிவு மூலம் அவ்வப்போது அறிக்கை கோரப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கணக்கெடுப்புபடி, மாநகராட்சியில் 1.80 லட்சம் தெருநாய்கள் உள்ளன. நாய் கடியால் பாதிக்கப்படும் நபா்களுக்கு ஆரம்ப சுகாதார நிலையம் முதல் அனைத்து மருத்துவமனைகளிலும் ஊசி தேவையான அளவு இருப்பு உள்ளது என்றாா்.