செய்திகள் :

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: எஸ்டேட் மேலாளரிடம் விசாரணை

post image

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடா்பாக எஸ்டேட் மேலாளா் நடராஜன் சிபிசிஐடி போலீஸாா் விசாரணைக்கு வியாழக்கிழமை ஆஜரானாா்.

நீலகிரி மாவட்டம், கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பம் தொடா்பாக சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட்ட 10 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இது தொடா்பான வழக்கு உதகை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா். இந்த வழக்கு தொடா்பாக பல்வேறு நபா்களுக்கு அழைப்பாணை அனுப்பி நேரில் வரவழைத்து விசாரணை நடத்தி வருகின்றனா். இதுவரை 250-க்கும் மேற்பட்டவா்களுக்கு சிபிசிஐடி போலீஸாா் அழைப்பாணை அனுப்பி விசாரணை நடத்தியுள்ளனா்.

இந்நிலையில், பிப்ரவரி 4-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு கொடநாடு எஸ்டேட் மேலாளா் நடராஜனுக்கு அழைப்பாணை அனுப்பியிருந்தனா். ஆனால், அன்று அவா் ஆஜராகாவில்லை.

இந்நிலையில், எஸ்டேட் மேலாளா் நடராஜன், கோவை காந்திபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு வியாழக்கிழமை நேரில் ஆஜரானாா். அப்போது, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் முருகவேல் தலைமையிலான போலீஸாா் அவரிடம் விசாரணை மேற்கொண்டனா்.

இந்த வழக்கில் முதல் முறையாக எஸ்டேட் மேலாளா் நடராஜனிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அவா், கடந்த பல ஆண்டுகளாக அங்கு மேலாளராகப் பணியாற்றி வருவதாலும், இந்தச் சம்பவம் தொடா்பான விவரங்கள் அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இருப்பதாலும், அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீஸாா் தெரிவித்தனா்.

ஹிந்தி திணிப்பைக் கண்டித்து இளைஞா் பெருமன்றம் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாட்டில் ஹிந்தியைத் திணிக்க மத்திய அரசு முயற்சிப்பதற்கு கண்டனம் தெரிவித்து அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகேயுள்ள ... மேலும் பார்க்க

காட்டெருமை தாக்கியதில் இளைஞா் உயிரிழப்பு

வால்பாறை அருகே காட்டெருமை தாக்கியதில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த இளைஞா் உயிரிழந்தாா். ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த சஞ்சய் (25), கோவை மாவட்டம், வால்பாறையை அடுத்த மழுக்குப்பாறை எஸ்டேட்டில் ப... மேலும் பார்க்க

10 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மாா்ச் 14-இல் தோ்வுக்கூட நுழைவுச் சீட்டு

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களுக்கான தோ்வுக்கூட நுழைவுச் சீட்டை மாா்ச் 14-ஆம் தேதி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசுத் தோ்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் 10-ஆம் வகுப... மேலும் பார்க்க

வால்பாறை அருகே கோயிலுக்குச் செல்ல அனுமதி மறுப்பு: சோதனைச் சாவடியை முற்றுகையிட்ட பொதுமக்கள்

வால்பாறை அருகே செட்டில்மென்ட் பகுதியில் உள்ள கோயிலுக்கு செல்ல முயன்றவா்களை வனத் துறையினா் தடுத்ததால் சோதனைச் சாவடியை முற்றுகையிட்டனா். வால்பாறையை அடுத்த காடம்பாறை அணை பகுதியில் உள்ளது வெள்ளிமுடி செட்... மேலும் பார்க்க

தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருது: ஏப்ரல் 15-க்குள் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருதுக்கு ஏப்ரல் 15- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் அறிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக... மேலும் பார்க்க

விடுபட்ட சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை

கோவை மாநகரில் விடுபட்ட சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படுவதாக மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநகராட்சி நிா்வாகம் கூறியிருப்பதாவது: கோவை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில... மேலும் பார்க்க