செய்திகள் :

மாடியில் இருந்து குதித்து ஐஎஃப்எஸ் அதிகாரி தற்கொலை!

post image

தில்லி வெளியுறவுத் துறை அமைச்சக குடியிருப்பின் மாடியில் இருந்து குதித்து இந்திய வெளியுறவு சேவை(ஐஎஃப்எஸ்) அதிகாரி வெள்ளிக்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.

முதல்கட்டத் தகவலில், தற்கொலை செய்துகொண்டவர் ஜித்தேந்திர ராவத் என்பது தெரியவந்துள்ளது.

இதையும் படிக்க : கடல் பேய்களைத் தேடிப்போகும் ஜிவி, கரை சேருவாரா? - கிங்ஸ்டன்  திரைவிமர்சனம்

மத்திய தில்லியின் சாணக்யபுரி பகுதியில் அமைந்துள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் குடியிருப்பில் முதல் மாடியில் ஜித்தேந்திர ராவத் என்ற ஐஎஃப்எஸ் அதிகாரி வசித்து வந்தார்.

இவர், தனது தாயுடன் வசித்து வரும் நிலையில், இன்று காலை 6 மணியளவில் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினர், சந்தேக மரணம் என்ற பிரிவில் வழக்குப் பதிந்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

அவரது உடல் உடற்கூராய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது மனைவியும் குழந்தையும் டேராடூனில் இருந்து தில்லிக்கு விரைந்துள்ளனர்.

குடியரசுத் துணைத்தலைவருக்கு நெஞ்சு வலி! எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி!

குடியரசுத் துணைத்தலைவர் ஜக்தீப் தன்கருக்கு (73), நள்ளிரவு 2 மணியளவில் ஏற்பட்ட திடீர் நெஞ்சு வலியால் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது, எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்... மேலும் பார்க்க

ஆர்ஜி கர் பெண் மருத்துவர் பாலியல் கொலை வழக்கில் பிரதமர் தலையிட கோரிக்கை!

கொல்கத்தா ஆர்ஜி கர் பெண் பயிற்சி மருத்துவரின் கொலை வழக்கில் பிரதமர் நரேந்திர மோடி உதவுமாறு, பலியான பெண்ணின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.உலகம் முழுவதும் சனிக்கிழமையில் சர்வதேச மகளிர் நாள் கொண்டாடப... மேலும் பார்க்க

லக்னௌ: பத்திரிகையாளர் சுட்டுக்கொலை!

உத்தரப் பிரதேசத்தில் உள்ளூர் பத்திரிகையாளர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ளூர் பத்திரிகையாளராக இருந்த ராகவேந்திரா பாஜ்பாய், சனிக... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா் மாநில அந்தஸ்து வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்: பரூக் அப்துல்லா வேண்டுகோள்

‘நாடாளுமன்றத்தில் உறுதியளித்தபடி ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்தை இந்திய அரசு திரும்ப வழங்க வேண்டும்’ என்று அந்த யூனியன் பிரதேசத்தின் ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவா் பரூக் அப்துல்லா சனிக்கிழமை கே... மேலும் பார்க்க

அரசியல் சாசன நிா்ணய சபையில் பங்கேற்ற 15 பெண்கள் குறித்த நூல் வெளியீடு

நமது சிறப்பு நிருபா் அரசியல் சாசன நிா்ணய சபையில் பங்களிப்பை வழங்கிய அம்மு சுவாமிநாதன், தாக்ஷாயணி வேலாயுதன் உள்ளிட்ட புகழ்பெற்ற 15 பெண்களின் வாழ்க்கை வரலாற்று புத்தகம் மத்திய சட்டம், நீதித்துறை அமைச்சக... மேலும் பார்க்க

உ.பி. 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் பள்ளி முதல்வா் வீட்டில் முறைகேடு: 14 போ் கைது

உத்தர பிரதேசத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் பள்ளி முதல்வா் வீட்டில் முறைகேட்டில் ஈடுபட்ட 14 போ் கைது செய்யப்பட்டனா். இதுதொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் சனிக்கிழமை கூறியதாவது: உத்தர பிரதேசத்தில் ... மேலும் பார்க்க