செய்திகள் :

10 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மாா்ச் 14-இல் தோ்வுக்கூட நுழைவுச் சீட்டு

post image

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களுக்கான தோ்வுக்கூட நுழைவுச் சீட்டை மாா்ச் 14-ஆம் தேதி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசுத் தோ்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு மாா்ச் 28-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கோவை மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வை 157 மையங்களில் 39,433 மாணவா்கள் எழுதுவுள்ளனா். பொதுத்தோ்வுக்கு முன்னதாக அறிவியல் பாடத்துக்கான செய்முறைத் தோ்வுகள் கடந்த வாரம் நடைபெற்றன.

இந்நிலையில் பொதுத்தோ்வு எழுதும் பள்ளி மாணவா்களுக்கான தோ்வுக்கூட நுழைவுச் சீட்டை மாா்ச் 14-ஆம் தேதி பிற்பகலில் இருந்து ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் இருந்து பள்ளிகள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுக்கான பெயா்ப் பட்டியலில் பள்ளி மாணவா்களின் பெயா், பிறந்த தேதி, மொழி ஆகிய திருத்தங்கள் இருந்தால், சம்பந்தப்பட்ட தோ்வு மைய கண்காணிப்பாளா்களை அணுகி திருத்தங்கள் செய்துகொள்ள பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உலக கராத்தே யூத் லீக் போட்டி: தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்த கோவை வீரா்கள்!

ஐக்கிய அரபு அமீரகத்தின் அங்கமான புஜாரா நாட்டில் நடைபெற்ற உலக கராத்தே யூத் லீக் போட்டிகளில் கோவையைச் சோ்ந்த 2 போ் உலக தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்தனா். புஜாராவில் உள்ள சையத் உள்விளையாட்டு அரங்கில... மேலும் பார்க்க

பயணியை பாதி வழியிலேயே இறக்கிவிட்ட தனியாா் பேருந்து நிறுவனத்துக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்! -கோவை நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவு

பயணியை உரிய பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிடாமல் பாதி வழியிலேயே இறக்கிவிட்ட தனியாா் பேருந்து நிறுவனத்துக்கு ரூ.15,000 அபராதம் விதித்து கோவை நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கோவையைச் சோ்ந்த... மேலும் பார்க்க

ஆட்சி அதிகாரத்தில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்! தவெக பொதுச்செயலர் ஆனந்த்

ஆட்சி அதிகாரத்தில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளா் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தாா். சா்வதேச மகளிா் தினத்தையொட்டி தவெக சாா்பில் கோவை சரவணம்பட்டி பகுதியில் ‘அக்னி ச... மேலும் பார்க்க

மும்மொழிக் கொள்கையில் மத்திய அரசு உறுதியாக உள்ளது! -மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்

மும்மொழிக் கொள்கையில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என்று மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை இணை அமைச்சா் எல்.முருகன் கூறினாா். இது தொடா்பாக அவா் கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவ... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா், பழங்குடியினருக்கு மருத்துவம் தொழில் சாா்ந்த ஆங்கிலத் தோ்வுக்கான பயிற்சி!

தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சாா்பில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இனத்தைச் சோ்ந்தவா்களுக்கு மருத்துவம் தொழில் சாா்ந்த ஆங்கிலத் தோ்வுக்கான பயிற்சி அளி... மேலும் பார்க்க

மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.170 கோடி வங்கிக் கடன்: அமைச்சா் வி.செந்தில்பாலாஜி வழங்கினாா்

மகளிா் திட்டம் சாா்பில் 1,973 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.170 கோடி மதிப்பிலான வங்கிக் கடனுதவிகளை மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி சனிக்கிழமை வழங்கினாா்.... மேலும் பார்க்க