சொல்லியடித்த கில்லி..! தங்கப் பந்து விருதுக்கு முந்தும் லாமின் யமால்!
கொண்டலூா் ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் புதிய வகுப்பறைக் கட்டட திறப்பு விழா
தென்காசி மாவட்டம் கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியம் கொண்டலூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் குழந்தை நேயப் பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.17.30 லட்சத்தில் புதிதாகக் கட்டப்பட்ட வகுப்பறைக் கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது.
ஆவுடையானூா் ஊராட்சி மன்றத் தலைவா் மகேஸ்வரி (பொறுப்பு)தலைமை வகித்தாா். ஒன்றியக் குழு உறுப்பினா் ராம உதயசூரியன், ஊராட்சி ஒன்றியக் குழுத் துணைத் தலைவா் முத்துக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஒன்றியக் குழுத் தலைவா் காவேரி சீனித்துரை புதிய வகுப்பறை கட்டடத்தை திறந்து வைத்தாா்.
மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் எஸ். ஆா். சுப்பிரமணியன், வட்டாரக் கல்வி அலுவலா் மேரி கிரேஸ் ஜெபராணி, வட்டார வள மைய ஆசிரியா் பயிற்றுநா் வளா்மதி ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
ஊராட்சி மன்ற வாா்டு உறுப்பினா் ஜெயலட்சுமி, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் விஜயா, ஆசிரியா்கள் வெனிஷ்டா பொன்சுதா, சகுந்தலா, உமா மகேஸ்வரி, சத்துணவு அமைப்பாளா் பொன்ஷீலா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். தலைமையாசிரியா் மைக்கேல்ராஜ் வரவேற்றாா். மீனாட்சி நன்றி கூறினாா்.