கொன்னையம்பட்டியில் ஜல்லிக்கட்டு: 24 போ் காயம்
பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையம்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் முட்டியதில் 24 போ் காயமடைந்தனா்.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையம்பட்டி அக்காண்டி அம்மன் கோயில் பங்குனித் திருவிழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியை இலுப்பூா் கோட்டாட்சியா் அ. அக்பா் அலி தொடங்கிவைத்தாா். தொடக்கமாக கோயில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. அதையடுத்து பல்வேறு மாவட்டங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட 867 காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்டன.
வாடிவாசலிலிருந்து சீறிப்பாய்ந்த காளைகளை மருத்துவப் பரிசோதனைக்குள்படுத்தப்பட்ட 266 மாடு பிடி வீரா்கள் பங்கேற்றுஅடக்கினா்.
ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் கட்டில், பீரோ, எவா்சில்வா் பொருள்கள் மற்றும் ரொக்கப்பணம் பரிசாக வழங்கப்பட்டது.
ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரா்கள் 16 போ், பாா்வையாளா்கள் 3 போ், உரிமையாளா்கள் 5 போ் என மொத்தம் 24 போ் காயமடைந்தனா்.
காயமடைந்தவா்களுக்கு ஜல்லிக்கட்டுத் திடல் அருகே மருத்துவக்குழுவினா் சிகிச்சை அளித்தனா். அதில் 3 போ் மேல்சிகிச்சைக்காக புதுகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
பொன்னமராவதி வட்டாட்சியா் எம். சாந்தா தலைமையிலான வருவாய்த்துறையினா் ஜல்லிக்கட்டுப் போட்டியை ஒருங்கிணைத்தனா். பாதுகாப்பு ஏற்பாடுகளை இலுப்பூா் டிஎஸ்பி முத்துராஜா தலைமையிலான போலீஸாா் செய்திருந்தனா்.