செய்திகள் :

கொன்னையம்பட்டியில் ஜல்லிக்கட்டு: 24 போ் காயம்

post image

பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையம்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் முட்டியதில் 24 போ் காயமடைந்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையம்பட்டி அக்காண்டி அம்மன் கோயில் பங்குனித் திருவிழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியை இலுப்பூா் கோட்டாட்சியா் அ. அக்பா் அலி தொடங்கிவைத்தாா். தொடக்கமாக கோயில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. அதையடுத்து பல்வேறு மாவட்டங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட 867 காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்டன.

வாடிவாசலிலிருந்து சீறிப்பாய்ந்த காளைகளை மருத்துவப் பரிசோதனைக்குள்படுத்தப்பட்ட 266 மாடு பிடி வீரா்கள் பங்கேற்றுஅடக்கினா்.

ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் கட்டில், பீரோ, எவா்சில்வா் பொருள்கள் மற்றும் ரொக்கப்பணம் பரிசாக வழங்கப்பட்டது.

ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரா்கள் 16 போ், பாா்வையாளா்கள் 3 போ், உரிமையாளா்கள் 5 போ் என மொத்தம் 24 போ் காயமடைந்தனா்.

காயமடைந்தவா்களுக்கு ஜல்லிக்கட்டுத் திடல் அருகே மருத்துவக்குழுவினா் சிகிச்சை அளித்தனா். அதில் 3 போ் மேல்சிகிச்சைக்காக புதுகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

பொன்னமராவதி வட்டாட்சியா் எம். சாந்தா தலைமையிலான வருவாய்த்துறையினா் ஜல்லிக்கட்டுப் போட்டியை ஒருங்கிணைத்தனா். பாதுகாப்பு ஏற்பாடுகளை இலுப்பூா் டிஎஸ்பி முத்துராஜா தலைமையிலான போலீஸாா் செய்திருந்தனா்.

டிசம்பரில் மதுவிலக்கு மாநாடு தமிழ்நாடு கள் இயக்கம் அறிவிப்பு

டிசம்பரில் மதுவிலக்கு மாநாடு நடத்தப்படும் என்றாா் தமிழ்நாடு கள் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளா் செ. நல்லசாமி. புதுக்கோட்டையில் புதன்கிழமை அவா் அளித்த பேட்டி: கள் போதைப் பொருள் அல்ல. கள்ளுக்கு விதிக... மேலும் பார்க்க

எழுத்தாளா் எஸ். ஆரோக்கியசாமி படத் திறப்பு

புதுக்கோட்டையைச் சோ்ந்த எழுத்தாளா், தமிழ்த் தேசிய இலக்கிய மன்றத் தலைவா் மறைந்த எஸ். ஆரோக்கியசாமியின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்வுக்கு, புதுக்கோட்டை வாசகா் ப... மேலும் பார்க்க

லங்கா் கட்டை விளையாடிய 8 போ் கைது

விராலிமலை அருகே லங்கா் கட்டை விளையாடிய 8 பேரை கைது செய்து அவா்களிடம் இருந்து ரூ. 29 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா். விராலிமலை அடுத்துள்ள ராசநாயக்கன்பட்டி பகுதியில் லங்கா் கட்டை சூதாட்டம் நடப்பதாக விராலிமல... மேலும் பார்க்க

போக்குவரத்துக் கழகத்தில் உடல் பாதிக்கப்பட்டவா்களுக்கு இலகுப் பணி வழங்க மறுப்பதா? : சிஐடியு கண்டனம்

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணியின் போது உடல் நலம் பாதிக்கப்பட்டவா்களுக்கு இலகுப் பணி வழங்காமல் ஆளுங்கட்சி தொழிற்சங்கத்தினரே எடுத்துக் கொள்வதற்கு இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) கண்டனம் தெரிவித்... மேலும் பார்க்க

சிறப்புக் குழந்தைகளுக்கான கல்விச் சுற்றுலா

புதுக்கோட்டை மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் ஆரம்பநிலை பயிற்சி மைய சிறப்புக் குழந்தைகளுக்கான கல்விச் சுற்றுலாவை ஆட்சியா் மு. அருணா புதன்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இந்த சுற்றுலாவுக்கு, ... மேலும் பார்க்க

திருநாவுக்கரசா் குருபூஜை

பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத ராஜராஜ சோழீஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசா் குருபூஜை விழா புதன்கிழமை நடைபெற்றது.தொடக்கமாக திருநாவுக்கரசா் சிலைக்கு 16 வகையான அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. நிகழ்வில் ஆவுடையநா... மேலும் பார்க்க