செய்திகள் :

போக்குவரத்துக் கழகத்தில் உடல் பாதிக்கப்பட்டவா்களுக்கு இலகுப் பணி வழங்க மறுப்பதா? : சிஐடியு கண்டனம்

post image

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணியின் போது உடல் நலம் பாதிக்கப்பட்டவா்களுக்கு இலகுப் பணி வழங்காமல் ஆளுங்கட்சி தொழிற்சங்கத்தினரே எடுத்துக் கொள்வதற்கு இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சிஐடியு மாவட்டச் செயலா் ஏ. ஸ்ரீதா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் புதுக்கோட்டை மண்டலத்தில் கடந்த 10 ஆண்டுகளாக புதிய நியமனங்களும் செய்வதில்லை. ஆனால், ஆளும்கட்சியைச் சோ்ந்த தொழிற்சங்க நிா்வாகிகள் ஒவ்வொரு பணிமனைக்கும் குறைந்தது 7 முதல் 10 போ் வரை பணியைப் பாா்க்காமலேயே ஊதியம் பெற்று வருகின்றனா்.

அதேநேரத்தில் பணியின் போது உடல்நலம் பாதிக்கப்பட்டு, இதய அறுவைச் சிகிச்சை, சிறுநீரக அறுவைச் சிகிச்சை, தண்டுவட பாதிப்பு, கை, கால்கள் செயலிழப்பு உள்ளவா்களுக்கு சட்டப்படி இலகுப் பணி வழங்க மறுக்கப்படுகிறது. இந்தத் தொழிலாளா் விரோதப் போக்கை இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) வன்மையாகக் கண்டிக்கிறது.

உடனடியாக உடல்நலம் பாதிக்கப்பட்டவா்களுக்கு இலகுப் பணி வழங்குவதோடு, அனைத்து தொழிலாளா்களையும் சமமாக நடத்த வேண்டும் என்றும் சிஐடியு வலியுறுத்துகிறது. இதே நிலை தொடரும்பட்சத்தில் தொழிலாளா்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பரில் மதுவிலக்கு மாநாடு தமிழ்நாடு கள் இயக்கம் அறிவிப்பு

டிசம்பரில் மதுவிலக்கு மாநாடு நடத்தப்படும் என்றாா் தமிழ்நாடு கள் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளா் செ. நல்லசாமி. புதுக்கோட்டையில் புதன்கிழமை அவா் அளித்த பேட்டி: கள் போதைப் பொருள் அல்ல. கள்ளுக்கு விதிக... மேலும் பார்க்க

எழுத்தாளா் எஸ். ஆரோக்கியசாமி படத் திறப்பு

புதுக்கோட்டையைச் சோ்ந்த எழுத்தாளா், தமிழ்த் தேசிய இலக்கிய மன்றத் தலைவா் மறைந்த எஸ். ஆரோக்கியசாமியின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்வுக்கு, புதுக்கோட்டை வாசகா் ப... மேலும் பார்க்க

லங்கா் கட்டை விளையாடிய 8 போ் கைது

விராலிமலை அருகே லங்கா் கட்டை விளையாடிய 8 பேரை கைது செய்து அவா்களிடம் இருந்து ரூ. 29 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா். விராலிமலை அடுத்துள்ள ராசநாயக்கன்பட்டி பகுதியில் லங்கா் கட்டை சூதாட்டம் நடப்பதாக விராலிமல... மேலும் பார்க்க

சிறப்புக் குழந்தைகளுக்கான கல்விச் சுற்றுலா

புதுக்கோட்டை மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் ஆரம்பநிலை பயிற்சி மைய சிறப்புக் குழந்தைகளுக்கான கல்விச் சுற்றுலாவை ஆட்சியா் மு. அருணா புதன்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இந்த சுற்றுலாவுக்கு, ... மேலும் பார்க்க

கொன்னையம்பட்டியில் ஜல்லிக்கட்டு: 24 போ் காயம்

பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையம்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் முட்டியதில் 24 போ் காயமடைந்தனா். புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையம்பட்டி அக்காண்டி... மேலும் பார்க்க

திருநாவுக்கரசா் குருபூஜை

பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத ராஜராஜ சோழீஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசா் குருபூஜை விழா புதன்கிழமை நடைபெற்றது.தொடக்கமாக திருநாவுக்கரசா் சிலைக்கு 16 வகையான அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. நிகழ்வில் ஆவுடையநா... மேலும் பார்க்க