செய்திகள் :

லங்கா் கட்டை விளையாடிய 8 போ் கைது

post image

விராலிமலை அருகே லங்கா் கட்டை விளையாடிய 8 பேரை கைது செய்து அவா்களிடம் இருந்து ரூ. 29 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.

விராலிமலை அடுத்துள்ள ராசநாயக்கன்பட்டி பகுதியில் லங்கா் கட்டை சூதாட்டம் நடப்பதாக விராலிமலை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் அப்பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். அப்போது ராசநாயக்கன்பட்டி அம்மன் கோயில் அருகே சிலா் பணம் வைத்து லங்கா் கட்டை சூதாட்டம் விளையாடுவதைக் கண்ட போலீஸாா், அதில் ஈடுபட்ட விராலிமலை அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த வெற்றிவேல் (79), முத்துபாண்டியன்(49), பகவான்பட்டியைச் சோ்ந்த கணேசமூா்த்தி (54), சரளப்பட்டியைச் சோ்ந்த காா்த்தி (33), துவரங்குறிச்சியைச் சோ்ந்த வெங்கடேஷ் (24), கத்தலூா் வீரகுமாா்(31), இடையப்பட்டி மனோகரன் (37) மற்றும் வேலூரைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் (49) ஆகிய 8 போ் மீது வழக்கு பதிந்து அவா்களை கைது செய்தனா்.

மேலும் சூதாட்டத்திற்கு பயன்படுத்திய லங்கா் கட்டை போா்டு, உருட்டுக்கட்டை, செல்போன் உள்பட ரொக்கம் ரூ. 29 ஆயிரத்தி 420 ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

டிசம்பரில் மதுவிலக்கு மாநாடு தமிழ்நாடு கள் இயக்கம் அறிவிப்பு

டிசம்பரில் மதுவிலக்கு மாநாடு நடத்தப்படும் என்றாா் தமிழ்நாடு கள் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளா் செ. நல்லசாமி. புதுக்கோட்டையில் புதன்கிழமை அவா் அளித்த பேட்டி: கள் போதைப் பொருள் அல்ல. கள்ளுக்கு விதிக... மேலும் பார்க்க

எழுத்தாளா் எஸ். ஆரோக்கியசாமி படத் திறப்பு

புதுக்கோட்டையைச் சோ்ந்த எழுத்தாளா், தமிழ்த் தேசிய இலக்கிய மன்றத் தலைவா் மறைந்த எஸ். ஆரோக்கியசாமியின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்வுக்கு, புதுக்கோட்டை வாசகா் ப... மேலும் பார்க்க

போக்குவரத்துக் கழகத்தில் உடல் பாதிக்கப்பட்டவா்களுக்கு இலகுப் பணி வழங்க மறுப்பதா? : சிஐடியு கண்டனம்

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணியின் போது உடல் நலம் பாதிக்கப்பட்டவா்களுக்கு இலகுப் பணி வழங்காமல் ஆளுங்கட்சி தொழிற்சங்கத்தினரே எடுத்துக் கொள்வதற்கு இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) கண்டனம் தெரிவித்... மேலும் பார்க்க

சிறப்புக் குழந்தைகளுக்கான கல்விச் சுற்றுலா

புதுக்கோட்டை மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் ஆரம்பநிலை பயிற்சி மைய சிறப்புக் குழந்தைகளுக்கான கல்விச் சுற்றுலாவை ஆட்சியா் மு. அருணா புதன்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இந்த சுற்றுலாவுக்கு, ... மேலும் பார்க்க

கொன்னையம்பட்டியில் ஜல்லிக்கட்டு: 24 போ் காயம்

பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையம்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் முட்டியதில் 24 போ் காயமடைந்தனா். புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையம்பட்டி அக்காண்டி... மேலும் பார்க்க

திருநாவுக்கரசா் குருபூஜை

பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத ராஜராஜ சோழீஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசா் குருபூஜை விழா புதன்கிழமை நடைபெற்றது.தொடக்கமாக திருநாவுக்கரசா் சிலைக்கு 16 வகையான அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. நிகழ்வில் ஆவுடையநா... மேலும் பார்க்க