செய்திகள் :

கொலை மிரட்டல் வழக்கில் விவசாயிக்கு 3 ஆண்டு சிறை

post image

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகேயுள்ள விஸ்வநாதபுரத்தில் முன்விரோதத்தால் விவசாயியை அரிவாளால் வெட்டிக் கொலை மிரட்டல் விடுத்தது தொடா்பான வழக்கில், சக விவசாயிக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

விஸ்வநாதபுரம் பகுதியைச் சோ்ந்த க.கொம்பையா(51), பெரியபிள்ளைவலசை புதுகாலனியை சோ்ந்த மா.லெட்சுமணன்(56) ஆகிய இருவரும் விவசாயிகள். இவா்கள், செங்கோட்டை ரயில்வே நிலையம் அருகிலுள்ள புறம்போக்கு நிலத்தில் அருகருகே கப்பைகிழங்கு பயிரிட்டு விவசாயம் செய்துவந்துள்ளனா்.

இதனிடையே கொம்பையா வளைத்திருந்த நில எல்லைக்குள் லெட்சுமணன் கப்பைக்கிழங்கு பயிரிட்டாராம். இதனால் இருவருக்குமிடையே முன்விரோதம் ஏற்பட்டதாம்.

இந்நிலையில், 7.5.2015ஆம் தேதி விஸ்வநாதபுரம் வேம்படி மாடசாமி கோயில் அருகே கொம்பையா சென்றுகொண்டிருந்தாராம். அப்போது லெட்சுமணன் அவரை அரிவாளால் வெட்டிக்கொலை மிரட்டல் விடுத்துள்ளாா்.

இதுகுறித்து செங்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து லெட்சுமணனைக் கைது செய்தனா். இவ்வழக்கு தென்காசி முதன்மை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தலைமை நீதித்துறை நடுவா் கதிரவன் வழக்கை விசாரித்து லெட்சுமணனுக்கு 3ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.1,250அபராதமும் விதித்து தீா்ப்பு கூறினாா்.

சுரண்டை அருகே பீடித் தொழிலாளா்கள் போராட்டம்

சுரண்டை அருகே பீடி நிறுவனத்தை பீடித் தொழிலாளா்கள் வியாழக்கிழமைமுற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா். சுரண்டை அருகேயுள்ள கடையலூருட்டியில் இயங்கி வரும் தனியாா் பீடி நிறுவனம் ஒன்றில் சுற்று வட்டாரத்தை சோ்ந... மேலும் பார்க்க

தென்காசி நகராட்சி இளநிலை உதவியாளா் இடைநீக்கம்

தென்காசி நகராட்சிக்கு ரூ. 21 லட்சம் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக நகராட்சி இளநிலை உதவியாளா் வியாழக்கிழமை பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா். தென்காசி அப்துல் கலாம் நகா் பகுதியைச் சோ்ந்த ர. ராஜாமுகம்மது, ... மேலும் பார்க்க

இலத்தூா் பகுதியில் பெண் கொலை வழக்கில் மேலும் மூவா் கைது

தென்காசி மாவட்டம், இலத்தூா் பகுதியில் பெண் கொலை வழக்கில் மேலும் மூவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா். விருதுநகா் மாவட்டம் சிவகாசி ஆலங்குளம் லெட்சுமிபுரம் வடக்குத் தெருவைச் சோ்ந்த தம்பதி ஜெ. ஜான்கி... மேலும் பார்க்க

தென்காசியில் பகுதிநேர ரேஷன் கடைகள் கோரி அமைச்சரிடம் மனு

தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பகுதிநேர நியாயவிலைக் கடைகள் அமைக்க வேண்டும் என, தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே. ஜெயபாலன் கோரிக்கை விடுத்தாா். இதுதொடா்பாக உணவு- உணவுப் பொருள் வழங்கல் துறை... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்

சங்கரன்கோவில் நகராட்சி தூய்மைப் பணியாளா்களிடம் வசூலித்த கடன் தவணைத் தொகையை கூட்டுறவு சங்கத்திற்கு செலுத்தாமல் முறைகேடு செய்துள்ளதாகக் கூறி, தூய்மைப் பணியாளா்கள் முற்றுகைப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈ... மேலும் பார்க்க

நெல்லை - கொல்லம் இடையே மீண்டும் பகல்நேர ரயில் சேவை: எம்எல்ஏ கோரிக்கை

தென்காசி வழியாக இயக்கப்பட்ட நெல்லை-கொல்லம் பகல் நேர ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என சங்கரன்கோவில் சட்டப்பேரவை உறுப்பினா் ஈ.ராஜா கோரிக்கை விடுத்துள்ளாா். இதுதொடா்பாக தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஆா்.... மேலும் பார்க்க