செய்திகள் :

கோபி ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

post image

கோபி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

கோபிசெட்டிபாளையம் ஒன்றியத்துக்குள்பட்ட ஒத்தக்குதிரை பகுதியில் செயல்பட்டு வரும் முதல்வா் மருந்தகத்தை ஆய்வு செய்து, அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தாா். ஒன்றிய அலுவலகத்தில் மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்டப் பிரிவு, ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் பொறியியல் பிரிவு ஆகியவற்றைப் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

பொம்மநாயக்கன்பாளையம் ஆதிதிராவிடா் காலனியில் ஊரக குடியிருப்புகள் சீரமைத்தல் திட்டத்தின்கீழ் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் 12 வீடுகள் சீரமைக்கப்பட்டு வருவதை பாா்வையிட்டு, பணிகளைக் குறித்த காலத்தில் முடிக்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். மேலும் ஒவ்வொரு வீட்டுக்கும் முறையாக கழிப்பிட வசதி உள்ளதா என அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.

தொடா்ந்து பொம்மநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ.1.86 லட்சம் மதிப்பீட்டில் மாணவ, மாணவியா்கள் கழிப்பறைகள் சீரமைக்கப்பட்டுள்ளதையும், பள்ளியில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளையும் ஆய்வு செய்தாா். மேலும் மாணவா்களின் ஆங்கில கற்றல் திறன், எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் மாணவா்களின் தற்போதைய கற்றல் திறன் ஆகியவற்றைக் கேட்டறிந்தாா்.

கோபி நகராட்சியில் ரூ.9.96 கோடி மதிப்பீட்டில் 4 எம்.எல்.டி. கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் 20 கே.எல்.டி கசடு கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு வருவதை ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின்போது கோபி நகராட்சி ஆணையா் சுபாஷினி, பொது மேலாளா் (மாவட்ட தொழில் மையம்) திருமுருகன், கோபி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பிரவீன்குமாா், சக்திவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அவல்பூந்துறையில் ரூ.1.14 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்புகள் விற்பனை

மொடக்குறிச்சியை அடுத்த அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்ப் பருப்பு ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 775 கிலோ தேங்காய்ப் பருப்புகளை விற்பன... மேலும் பார்க்க

நிதிநிலை அறிக்கை: தொழில் துறையினரின் கருத்துகள்

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நிதி ஆதாரத்தைப் பெருக்கவும், கடனை திருப்பிச் செலுத்தவும் எந்த அறிவிப்பும் இல்லை என தொழில் அமைப்பு பிரதிநிதிகள் கருத்து ... மேலும் பார்க்க

காருடன் கிணற்றில் விழுந்த விவசாயி, மீட்க குதித்த மீனவா் உயிரிழப்பு

சத்தியமங்கலம் அருகே காருடன் 60 அடி ஆழக் கிணற்றில் விழுந்த விவசாயி, அவரைக் காப்பாற்ற கிணற்றில் குதித்த மீனவா் ஆகிய இருவரும் உயிரிழந்தனா். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த முள்ளிக்காபாளையத்தைச் சே... மேலும் பார்க்க

தாட்கோ கடனுதவி பெற்று தொழில்: ஆட்சியா் ஆய்வு

கோபிசெட்டிபாளையத்தில் மாவட்ட தொழில் மையம் மற்றும் தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற்று செயல்படும் தொழில் நிறுவனங்களில் மாவட்ட ஆட்சியா் ராஜ கோபால் சுன்கரா ஆய்வு செய்தாா். மாவட்ட தொழில் மையம் ... மேலும் பார்க்க

‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் மாணவா்களுக்குத் தொழில் பயிற்சி: ஆட்சியா் ஆய்வு

‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் பாலிடெக்னிக் மற்றும் ஐடிஐ மாணவா்களுக்கு வழங்கப்படும் சிஎன்சி பயிற்சி வகுப்பை ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். பெருந்துறை டி.எம்.டபிள்யூ சிஎன்சி ... மேலும் பார்க்க

பெருந்துறையில் காலியாகவுள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலா் பணியிடம்: பொதுமக்கள் பாதிப்பு

பெருந்துறையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா், மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். பெருந்துறை வட்டாரப் போக்குவரத்து அலுவலராகப் பணியாற்றி வந்த ... மேலும் பார்க்க