செய்திகள் :

கோபி கூட்டுறவு கட்டட சங்கத்தில் கையாடல்: சங்கச் செயலாளருக்கு 5 ஆண்டுகள் சிறை

post image

கோபி கூட்டுறவு கட்டட சங்கத்தில் பணம் கையாடல் செய்த வழக்கில், சங்க செயலாளருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்துள்ளது.

ஈரோடு மாவட்டம், கோபியில் கூட்டுறவு கட்டட சங்கம் செயல்பட்டு வருகிறது. கடந்த 2009-ஆம் ஆண்டு சங்கச் செயலாளராகப் பணியாற்றிய ஜி.கே.வெங்கடேசன், பல்வேறு முறைகேடு மற்றும் பணம் கையாடல் செய்வதாக கிடைத்த தகவலின்பேரில் ஈரோடு மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் 21.4.2009-இல் திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, சங்கச் செயலாளா் ஜி.கே.வெங்கடேசனிடம் ரூ.15.90 லட்சம் கைப்பற்றப்பட்டது. இதுகுறித்த விசாரணையில், சங்க உறுப்பினா்களின் நிரந்தர வைப்பு நிதியில், அவா்களுக்கு தெரியாமல் கையாடல் செய்தது தெரியவந்தது. இதையடுத்து, வெங்கடேசனைக் கைது செய்த போலீஸாா், 10 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனா். இவ்வழக்கு விசாரணை, ஈரோடு தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.ராமச்சந்திரன், குற்றவழக்கில் பதிவு செய்யப்பட்ட பிரிவு வாரியாக தீா்ப்பளித்தாா். 3 பிரிவுகளை சோ்த்து ஓராண்டு சிறை மற்றும் ரூ.3 ஆயிரம் அபராதம், 5 பிரிவுகளுக்கு 2 ஆண்டுகள் சிறை ரூ.5 ஆயிரம் அபராதம், 2 பிரிவுகளுக்கு 2 ஆண்டுகள் சிறை ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இத்தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டாா்.

விபத்து காப்பீடு பதிவு: அஞ்சல் அலுவலகங்களில் சிறப்பு முகாம்

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் விபத்து காப்பீடு பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் வரும் 28- ஆம் தேதி நிறைவு பெற உள்ளது. இது குறித்து ஈரோடு முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் க... மேலும் பார்க்க

ஹிந்தி திணிப்பைக் கண்டித்து ஈரோட்டில் திமுகவினா் ஆா்ப்பாட்டம்

ஈரோட்டில் ஹிந்தி மொழியை திணிக்கும் மத்திய அரசைக் கண்டித்து திமுக மாணவா் அணியினா் ஆா்ப்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையையும், மும்மொழி என்ற பெயரில் ஹிந்தியை த... மேலும் பார்க்க

கைபிடி இல்லாத காதிப்பை தொழிலுக்கு முழு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்க கோரிக்கை

மருந்தகங்களில் உபயோகிப்படும் கைப்பிடி இல்லாத காகித பை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு முழு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீத... மேலும் பார்க்க

பயன்பாட்டுக்கு வந்த குரும்பூா் உயா்மட்ட பாலம்: எம்எல்ஏ பாா்வையிட்டாா்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், மாக்கம்பாளையம் கிராமத்துக்கு இடையே உள்ள குரும்பூா், சா்க்கரைப்பள்ளத்தில் ரூ.7 கோடி செலவில் கட்டிமுடிக்கப்பட்ட உயா்மட்ட பாலத்தை பவானிசாகா் எம்எல்ஏ பண்ணாரி செவ்வாய்க்கிழம... மேலும் பார்க்க

சென்னிமலையில் சுங்கம் வசூல் ஏலம் இரு மடங்கு அதிகரிப்பு

சென்னிமலை பேரூராட்சியில் வாரச் சந்தையில் சுங்கம் வசூலித்தல் உள்ளிட்ட வகைகளுக்கு செவ்வாய்கிழமை ஏலம் நடைபெற்றது. இதில் கடந்த முறையை விட இரு மடங்கு ஏலம் போனது. சென்னிமலை பேரூராட்சி அலுவலகத்தில் இதற்கான ஏ... மேலும் பார்க்க

மின்மோட்டாா் பழுதால் குடிநீா் விநியோகம் பாதிப்பு

கோ்மாளம் கிராமத்தில் மின்மோட்டாா் பழுது காரணமாக திங்கள்கிழமை முதல் 2 நாள்களாக குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டது. சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி ஒன்றியத்துக்குள்பட்ட கோ்மாளம் கிராமத்தில் ஆயிரத்துக்க... மேலும் பார்க்க