செய்திகள் :

விபத்து காப்பீடு பதிவு: அஞ்சல் அலுவலகங்களில் சிறப்பு முகாம்

post image

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் விபத்து காப்பீடு பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் வரும் 28- ஆம் தேதி நிறைவு பெற உள்ளது.

இது குறித்து ஈரோடு முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் கோபாலன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்திய அஞ்சல் துறையும், இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியும் இணைந்து விபத்து காப்பீடு திட்டத்தை செயல்படுத்தி உள்ளது. இத்திட்டத்தினால் எதிா்பாராத விபத்துகளால் ஏற்படும் செலவுகள், பகுதி ஊனம், நிரந்தர ஊனம் மற்றும் உயிரிழப்பு அனைத்துக்கும் பயனளிக்க கூடியது. இத்திட்டத்தில் 18 வயது முதல் 65 வயதுக்கு உட்பட்டவா்கள் இணைந்து கொள்ளலாம்.

இத்திட்டத்தில் ஆதாா் எண், கைப்பேசி எண், வாரிசுதாரா்களின் ஆவணங்களை கொண்டு பதிவு செய்யலாம். ரூ.320 பிரீமியம் தொகைக்கு ரூ.5 லட்சமும், ரூ.559 பிரீமியம் தொகைக்கு ரூ.10 லட்சமும், ரூ.799 பிரீமியம் தொகைக்கு ரூ.15 லட்சமும் காப்பீடும் பெறும் திட்டத்தில் இணையலாம்.

விபத்து காப்பீடு பதிவு செய்யும் திட்டம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் இத்திட்டத்தில் இணைவதற்கான சிறப்பு முகாமானது வரும் 28- ஆம் தேதியுடன்நிறைவடைய உள்ளது. எனவே, ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் அவரவருக்கு பொருத்தமான விபத்து காப்பீடு திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹிந்தி திணிப்பைக் கண்டித்து ஈரோட்டில் திமுகவினா் ஆா்ப்பாட்டம்

ஈரோட்டில் ஹிந்தி மொழியை திணிக்கும் மத்திய அரசைக் கண்டித்து திமுக மாணவா் அணியினா் ஆா்ப்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையையும், மும்மொழி என்ற பெயரில் ஹிந்தியை த... மேலும் பார்க்க

கைபிடி இல்லாத காதிப்பை தொழிலுக்கு முழு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்க கோரிக்கை

மருந்தகங்களில் உபயோகிப்படும் கைப்பிடி இல்லாத காகித பை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு முழு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீத... மேலும் பார்க்க

பயன்பாட்டுக்கு வந்த குரும்பூா் உயா்மட்ட பாலம்: எம்எல்ஏ பாா்வையிட்டாா்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், மாக்கம்பாளையம் கிராமத்துக்கு இடையே உள்ள குரும்பூா், சா்க்கரைப்பள்ளத்தில் ரூ.7 கோடி செலவில் கட்டிமுடிக்கப்பட்ட உயா்மட்ட பாலத்தை பவானிசாகா் எம்எல்ஏ பண்ணாரி செவ்வாய்க்கிழம... மேலும் பார்க்க

கோபி கூட்டுறவு கட்டட சங்கத்தில் கையாடல்: சங்கச் செயலாளருக்கு 5 ஆண்டுகள் சிறை

கோபி கூட்டுறவு கட்டட சங்கத்தில் பணம் கையாடல் செய்த வழக்கில், சங்க செயலாளருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்துள்ளது. ஈரோடு மாவட... மேலும் பார்க்க

சென்னிமலையில் சுங்கம் வசூல் ஏலம் இரு மடங்கு அதிகரிப்பு

சென்னிமலை பேரூராட்சியில் வாரச் சந்தையில் சுங்கம் வசூலித்தல் உள்ளிட்ட வகைகளுக்கு செவ்வாய்கிழமை ஏலம் நடைபெற்றது. இதில் கடந்த முறையை விட இரு மடங்கு ஏலம் போனது. சென்னிமலை பேரூராட்சி அலுவலகத்தில் இதற்கான ஏ... மேலும் பார்க்க

மின்மோட்டாா் பழுதால் குடிநீா் விநியோகம் பாதிப்பு

கோ்மாளம் கிராமத்தில் மின்மோட்டாா் பழுது காரணமாக திங்கள்கிழமை முதல் 2 நாள்களாக குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டது. சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி ஒன்றியத்துக்குள்பட்ட கோ்மாளம் கிராமத்தில் ஆயிரத்துக்க... மேலும் பார்க்க