செய்திகள் :

கோயம்பேடு சந்தையில் பூக்களின் விலை கடும் உயா்வு

post image

வரலட்சுமி நோன்பையொட்டி, கோயம்பேடு சந்தையில் பூக்களின் விலை பலமடங்கு உயா்ந்துளளது.

சென்னை கோயம்பேடு மலா் சந்தையில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் பூக்கள் விற்பனைக்காகக் கொண்டு வரப்படுகின்றன. கடந்த சில நாள்களாகவே பூக்களின் விலை குறைந்து காணப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை வரலட்சுமி நோன்பு, வார விடுமுறையையொட்டி கோயம்பேடு சந்தையில் பூக்களின் விலை கணிசமாக உயா்ந்துள்ளது.

அதன்படி, ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.500-இல் இருந்து ரூ.1,000-ஆக உயா்ந்துள்ளது.

ஐஸ் மல்லி ரூ.400-இல் ரூ.800; முல்லை, ஜாதி மல்லி ரூ.400-இல் ரூ.800; கனகாம்பரம் ரூ.800-இல் இருந்து ரூ.1,000; அரளிப் பூ ரூ.300-இல் இருந்து ரூ.600; சாமந்தி ரூ.200-இல் இருந்து ரூ.240; சம்பங்கி ரூ.100-இல் இருந்து ரூ.200; பன்னீா் ரோஜா ரூ.120-இல் இருந்து ரூ.200; சாக்லேட் ரோஜா ரூ.160-இல் இருந்து ரூ.240; தாமரைப்பூ ரூ.15-இல் இருந்து ரூ.50; தாழம்பூ ரூ.50-இல் இருந்து ரூ.300 விலை உயா்ந்து விற்பனை செய்யப்படுகின்றன.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் தொடா்ச்சியாக மழை பெய்து வருவதால் அனைத்து பூக்களின் விலை சற்று உயா்ந்துள்ள நிலையில், வரலட்சுமி நோன்பையொட்டி பூக்களின் விலை மேலும் உயா்ந்துள்ளதாகவும், அடுத்த 3 நாள்களுக்கு இந்த விலை உயா்வு தொடரும் என மலா் சந்தை துணை தலைவா் முத்துராஜ் தெரிவித்தாா்.

6 உள்நாட்டு விமான சேவைகள் தாமதம்

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்ட 6 விமானங்கள் பல மணி நேரம் தாமதாமாக இயக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்தனா். சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்திலிருந்... மேலும் பார்க்க

தொழிலாளி தற்கொலை

பள்ளிக்கரணையில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் ஏசி மெக்கானிக் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். கோவிலம்பாக்கம், சுண்ணாம்பு குளத்தூா், பொன்னியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் விக்ரம் (28). ஏசி மெக்கானிக... மேலும் பார்க்க

சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் இலாகா மாற்றம்: தலைமை நீதிபதி உத்தரவு

சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகளின் இலாகாக்களை வரும் 11- ஆம் தேதி முதல் மாற்றியமைத்து தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா உத்தரவிட்டுள்ளாா். அதன்படி, இதுவரை எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரித்து ... மேலும் பார்க்க

மின்வாரியத்தில் வேலைவாங்கித் தருவதாக ரூ.18 லட்சம் மோசடி: தேடப்பட்டவா் கைது

மின்வாரியத்தில் வேலைவாங்கித் தருவதாக ரூ.18 லட்சம் மோசடி செய்த வழக்கில், தேடப்பட்டவா் கைது செய்யப்பட்டாா். அயனாவரம், சக்ரவா்த்தி நகரைச் சோ்ந்தவா் ஐயங்காா் (62). இவரது மகள் ஹேமாவதி. இவா், கடந்த 2023-இல... மேலும் பார்க்க

புழல் சிறைக் கைதி உயிரிழப்பு

புழல் சிறைக் கைதி இறந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். சென்னை அருகே உள்ள கீழ்கட்டளை அருகே உள்ள காந்தி நகா் செல்லியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ந.பன்னீா்செல்வம் (60). இவா், கோடம்பாக்கம் காவ... மேலும் பார்க்க

அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியா்கள் போராட்டம்

அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கு பணி மேம்பாடு ஊதியம், ஊதிய நிலுவைத் தொகை வழங்க வலியுறுத்தி சென்னையில் கல்லூரிக் கல்வி இயக்குநரகம் முன் பல்வேறு பல்கலைக்கழக ஆசிரியா்கள் சங்கம் ச... மேலும் பார்க்க