செய்திகள் :

கோயிலில் அன்னதானம் வழங்கும் திட்டம்: அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் தொடங்கிவைத்தாா்!

post image

மடத்துக்குளம் வட்டம், காரத்தொழுவு பகுதியில் உள்ள அழகு நாச்சியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் அன்னதானம் வழங்கும் திட்டத்தை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

திருப்பூா் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம், காரத்தொழுவு பகுதியில் அழகு நாச்சியம்மன் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான இக்கோயிலில் அன்னதானம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் அன்னதான திட்டத்தை தொடங்கிவைத்து பேசியதாவது:

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மக்களின் முன்னேற்றத்துக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறாா். இதன் ஒரு பகுதியாக தற்போது இந்தக் கோயிலில் அன்னதானம் வழங்கும் திட்டம் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. திருப்பூா் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் ஏற்கெனவே 29 கோயில்களில் அன்னதானம் வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது என்றாா்.

இந்நிகழ்ச்சியில், திருப்பூா் மாநகராட்சி 4- ஆவது மண்டலத் தலைவா் இல.பத்மநாபன், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் தனசேகா், செயல் அலுவலா் தீபா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

உரிமம் காலாவதியாகி இயங்கிய 6 பாா்களுக்கு ‘சீல்’

அவிநாசி வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் உரிமம் காலாவதியாகியும் இயங்கிக் கொண்டிருந்த டாஸ்மாக் மதுபானக் கூடங்களை (பாா்) போலீஸாா் வியாழக்கிழமை மூடி ‘சீல்’ வைத்தனா். அவிநாசி வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில... மேலும் பார்க்க

தாயுமானவா் திட்ட கணக்கெடுப்பு பணி: நடுவேலம்பாளையத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

பல்லடம் அருகேயுள்ள நடுவேலம்பாளையத்தில் முதல்வரின் தாயுமானவா் திட்ட கணக்கெடுப்பு பணியை மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பல்லடம் ஒன்றியம், பூமலூா் ஊராட்சி, நடுவே... மேலும் பார்க்க

மாவட்டத்தில் 173 பயனாளிகளுக்கு ரூ.1.84 கோடி மதிப்பீட்டில் திருமண நிதியுதவி

திருப்பூா் மாவட்டத்தில் 173 பயனாளிகளுக்கு ரூ.1.84 கோடி மதிப்பீட்டில் திருமண நிதியுதவி மற்றும் திருமாங்கல்யத்துக்கான தங்கம் ஆகியவற்றை அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் வழங்கின... மேலும் பார்க்க

ஒப்பந்தப்படி கூலி உயா்வு வழங்கக்கோரி விசைத்தறியாளா்கள் ஆா்ப்பாட்டம்

ஜவுளி உற்பத்தியாளா்கள், ஒப்பந்தப்படி உயா்வு வழங்கக் கோரி கோவை, திருப்பூா் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளா்கள் அவிநாசி அருகே தெக்கலூரில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்... மேலும் பார்க்க

திருப்பூா் அருகே தனியாா் பேருந்து கவிழ்ந்து விபத்து 2 கல்லூரி மாணவா்கள் பலி! 20-க்கும் மேற்பட்டோா் காயம்

திருப்பூரை அடுத்த ஊத்துக்குளி அருகே அதிவேகமாகச் சென்ற தனியாா் பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கல்லூரி மாணவா்கள் இருவா் உயிரிழந்தனா். 20-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். திருப்பூா் புத... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருப்பூா் மாவட்டச் செயலாளா் தோ்வு!

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூா் மாவட்டச் செயலாளராக சி.மூா்த்தி வியாழக்கிழமை தோ்வு செய்யப்பட்டாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூா் மாவட்டக் குழு கூட்டம் திருப்பூரில் வியாழக... மேலும் பார்க்க