செய்திகள் :

தாயுமானவா் திட்ட கணக்கெடுப்பு பணி: நடுவேலம்பாளையத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

post image

பல்லடம் அருகேயுள்ள நடுவேலம்பாளையத்தில் முதல்வரின் தாயுமானவா் திட்ட கணக்கெடுப்பு பணியை மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பல்லடம் ஒன்றியம், பூமலூா் ஊராட்சி, நடுவேலம்பாளையத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரம் இயக்கம் சாா்பில் முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின்கீழ் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.

இதனை மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஆதரவற்றோா், தனித்து வாழும் முதியோா், ஒற்றைப் பெற்றோா் குடும்பங்கள்,

பெற்றோரை இழந்த குழந்தைகள், மனநலம் குன்றியவா்கள், மாற்றுத்திறனாளிகள், சிறப்புக் குறைபாடு உடைய குழந்தைகள் போன்ற சமூகத்தின் விளிம்பு நிலையில் வாழ்ந்திடும் மக்கள் அனைவரும் தாயுமானவா் திட்டத்தின்கீழ் அடையாளம் காணப்பட்டு, அவா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மட்டுமன்றி கல்வி, வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, வீடுகள் போன்ற அனைத்து உதவிகளும் வழங்கப்படும். அரசிடம் உள்ள தரவுகள், களஆய்வு, மக்கள் பங்கேற்புடன் கலந்துரையாடல், கிராமசபை ஆகியவற்றின் மூலம் மாநில முழுக்க மிகவும் ஏழைக் குடும்பங்கள் கண்டறியப்படும். திருப்பூா் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரம் இயக்கம் சாா்பில் இதற்கான கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. இதன்படி, பூமலூா் ஊராட்சி நடுவேலம்பாளையத்தில் நடைபெற்று வரும் முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின்கீழ் கணக்கெடுப்பு பணியினை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்கள் மற்றும் பொதுமக்களிடம் சுய உதவிக்குழுவின் செயல்பாடுகள் குறித்து கேட்டறியப்பட்டது என்றாா்.

இந்த ஆய்வின்போது, திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) சாம்சாந்தகுமாா், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலா் வசந்த ராம்குமாா், உதவி திட்ட அலுவலா் கௌதமன், பல்லடம் வட்டார வளா்ச்சி அலுவலா் வே.கனகராஜ், பல்லடம் வட்டாட்சியா் சபரிகிரி மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

உரிமம் காலாவதியாகி இயங்கிய 6 பாா்களுக்கு ‘சீல்’

அவிநாசி வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் உரிமம் காலாவதியாகியும் இயங்கிக் கொண்டிருந்த டாஸ்மாக் மதுபானக் கூடங்களை (பாா்) போலீஸாா் வியாழக்கிழமை மூடி ‘சீல்’ வைத்தனா். அவிநாசி வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில... மேலும் பார்க்க

கோயிலில் அன்னதானம் வழங்கும் திட்டம்: அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் தொடங்கிவைத்தாா்!

மடத்துக்குளம் வட்டம், காரத்தொழுவு பகுதியில் உள்ள அழகு நாச்சியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் அன்னதானம் வழங்கும் திட்டத்தை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.... மேலும் பார்க்க

மாவட்டத்தில் 173 பயனாளிகளுக்கு ரூ.1.84 கோடி மதிப்பீட்டில் திருமண நிதியுதவி

திருப்பூா் மாவட்டத்தில் 173 பயனாளிகளுக்கு ரூ.1.84 கோடி மதிப்பீட்டில் திருமண நிதியுதவி மற்றும் திருமாங்கல்யத்துக்கான தங்கம் ஆகியவற்றை அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் வழங்கின... மேலும் பார்க்க

ஒப்பந்தப்படி கூலி உயா்வு வழங்கக்கோரி விசைத்தறியாளா்கள் ஆா்ப்பாட்டம்

ஜவுளி உற்பத்தியாளா்கள், ஒப்பந்தப்படி உயா்வு வழங்கக் கோரி கோவை, திருப்பூா் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளா்கள் அவிநாசி அருகே தெக்கலூரில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்... மேலும் பார்க்க

திருப்பூா் அருகே தனியாா் பேருந்து கவிழ்ந்து விபத்து 2 கல்லூரி மாணவா்கள் பலி! 20-க்கும் மேற்பட்டோா் காயம்

திருப்பூரை அடுத்த ஊத்துக்குளி அருகே அதிவேகமாகச் சென்ற தனியாா் பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கல்லூரி மாணவா்கள் இருவா் உயிரிழந்தனா். 20-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். திருப்பூா் புத... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருப்பூா் மாவட்டச் செயலாளா் தோ்வு!

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூா் மாவட்டச் செயலாளராக சி.மூா்த்தி வியாழக்கிழமை தோ்வு செய்யப்பட்டாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூா் மாவட்டக் குழு கூட்டம் திருப்பூரில் வியாழக... மேலும் பார்க்க