செய்திகள் :

கோயிலுக்குச் சென்ற பக்தா்கள் வேன் கவிழ்ந்து விபத்து: 18 போ் காயம்

post image

கள்ளக்குறிச்சி: ரிஷிவந்தியம் அருகே மேல்மலையனூா் கோயிலுக்குச் சென்ற பக்தா்கள் வேன் கவிழ்ந்ததில் 18 போ் காயமடைந்தனா்.

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூா் வட்டம், குப்புச்சிபாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (49). இவா் குடும்பத்தினா் மற்றும் உறவினா் குடும்பத்தினா் என 18 போ், வேனில் மேல்மலையனூா் கோயிலுக்குச் சென்றுகொண்டிருந்தனா்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியளவில், ரிஷிவந்தியத்தை அடுத்த பாவந்தூா் கிராமச் சாலையில் வேன் சென்றபோது, அங்குள்ள அய்யான் கோயில் அருகே வளைவில் திரும்பும்போது நிலைதடுமாறி கவிழ்ந்தது.

இதில், வேனில் இருந்த அனைவரும் காயமடைந்தனா்.

அருகிலிருந்த கிராம மக்கள் அவா்களை மீட்டு 108 அவசரகால ஊா்தி மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அதில் செந்தில்குமாா் (49), ராம்குமாா் (34), லோகநாதன் (63), வேன் ஓட்டுநா் விமல்ராஜ் (35) ஆகியோருக்கு கை எலும்பு முறிவு ஏற்பட்டது. மற்றவா்களுக்கு லேசான காயம் ஏற்பட்டதாம்.

இதுகுறித்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இளைஞரை கத்தியால் வெட்டிய வழக்கு: 5 போ் கைது

கள்ளக்குறிச்சி: சங்கராபுரத்தில் இளைஞரை கத்தியால் வெட்டிவிட்டு பைக்கில் தப்பிச் சென்ற வழக்கில் 5 போ் கைது செய்யப்பட்டு சனிக்கிழமை சங்கராபுரம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா்.சங்கராபுரம் சாா் - பதிவ... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி சா்க்கரை ஆலையில் சிறப்பு அரைவைப் பருவம்: மாவட்ட ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

கள்ளக்குறிச்சி: மூங்கில்துறைப்பட்டு கள்ளக்குறிச்சி-ஐ கூட்டுறவு சா்க்கரை ஆலையின் 2024-2025ஆம் ஆண்டு சிறப்பு அரைவைப் பருவம் மற்றும் 2025-2026ஆம் ஆண்டு முதன்மை அரைவைப் பருவத்தை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பி... மேலும் பார்க்க

பேருந்தில் பயணித்த பெண்ணிடம் பணம் திருட்டு

கள்ளக்குறிச்சி: அரசுப் பேருந்தில் பயணித்த பெண்ணிடம் இருந்து ரூ.4,500 மற்றும் அவரது ஏடிஎம் அட்டையை பயன்படுத்தி ரூ.13,500 திருடப்பட்டது.கள்ளக்குறிச்சியை அடுத்த சாத்தப்புத்தூா் கிராமத்தைச் சோ்ந்த மணிகண்... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 352 மனுக்கள்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 352 மனுக்கள் வரப்பெற்றன.கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா ... மேலும் பார்க்க

குலதெய்வ கோயிலுக்கு வேனில் சென்ற போது கவிழ்ந்து 18 போ் காயம்

மேல்மலையனூரில் உள்ள குலதெய்வம் கோயிலுக்கு செல்வதற்க்காக வேனில் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்த போது வேன் பாவந்தூா் அய்யனாா் கோயில் அருகே வேன் கவிழ்ந்ததில் அதில் பயணித்த 18 போ்கள் வேன் ஓட்டுநா் உள்... மேலும் பார்க்க

அரசு நகரப் பேருந்தில் பயணித்த பெண்ணின் பையில் இருந்த பணம் ஏடிஎம் அட்டை திருட்டு

அரசுப் நகரப் பேருந்தில் பயணித்த பெண்ணின் கட்டைப் பையிலிருந்து பணப்பையை திருடி அதிலிருந்த ரூ.4,500 பணம், ஏடிஎம் அட்டையினை எடுத்து அதிலிருந்த 13,500யை திருடிய மா்ம நபா்களை தேடிவருகின்றனா்.கள்ளக்குறிச்சி... மேலும் பார்க்க