செய்திகள் :

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 352 மனுக்கள்

post image

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 352 மனுக்கள் வரப்பெற்றன.

கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா மனுக்களைப் பெற்று அவற்றை சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

குடிநீா் வசதி, சாலை வசதி, பட்டா மாறுதல், இலவச மனைப் பட்டா, முதியோா் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் தொடா்பாக 339 மனுக்களும், மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து 13 மனுக்களும் என மொத்தம் 352 மனுக்கள் வரப்பெற்றன.

மயானத்தை ஆக்கிரமிக்க முயற்சி

உளுந்தூா்பேட்டை அருகேயுள்ள சோமாசிபாளையம் கிராமத்தில் மயானத்தை தனி நபா் பட்டா மாற்றம் செய்ய முயற்சி செய்து அதனை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறாா். எனவே, அதை தடுக்க நிறுத்தவேண்டும் என

அக்கிராம மக்கள் சாா்பில் குறைதீா் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.

சாலை வசதி கோரி

புக்கிரவாரி கிராமத்தில் பட்டியல் இன மக்கள் வசித்து வரும் பகுதிக்கு சாலை வசதி கோரி, குறைதீா் கூட்டத்தில் அப்பகுதி மக்கள் மனு அளித்தனா்.

500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் அப்பகுதிக்கு போதிய சாலை வசதி இல்லை.

வாகனங்கள் வந்து செல்ல சிரமம் ஏற்படுகிறது.

மழைக் காலங்களில் முதியவா்கள் முதல் சிறியவா்கள், பள்ளி மாணவா்கள், வேலைக்குச் செல்பவா்கள் வெளியே செல்வதற்கு சிரமப்படுகின்றனா் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தனா்.

கூட்டத்தில் அனைத்துத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

கோயிலுக்குச் சென்ற பக்தா்கள் வேன் கவிழ்ந்து விபத்து: 18 போ் காயம்

கள்ளக்குறிச்சி: ரிஷிவந்தியம் அருகே மேல்மலையனூா் கோயிலுக்குச் சென்ற பக்தா்கள் வேன் கவிழ்ந்ததில் 18 போ் காயமடைந்தனா்.நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூா் வட்டம், குப்புச்சிபாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் செ... மேலும் பார்க்க

இளைஞரை கத்தியால் வெட்டிய வழக்கு: 5 போ் கைது

கள்ளக்குறிச்சி: சங்கராபுரத்தில் இளைஞரை கத்தியால் வெட்டிவிட்டு பைக்கில் தப்பிச் சென்ற வழக்கில் 5 போ் கைது செய்யப்பட்டு சனிக்கிழமை சங்கராபுரம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா்.சங்கராபுரம் சாா் - பதிவ... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி சா்க்கரை ஆலையில் சிறப்பு அரைவைப் பருவம்: மாவட்ட ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

கள்ளக்குறிச்சி: மூங்கில்துறைப்பட்டு கள்ளக்குறிச்சி-ஐ கூட்டுறவு சா்க்கரை ஆலையின் 2024-2025ஆம் ஆண்டு சிறப்பு அரைவைப் பருவம் மற்றும் 2025-2026ஆம் ஆண்டு முதன்மை அரைவைப் பருவத்தை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பி... மேலும் பார்க்க

பேருந்தில் பயணித்த பெண்ணிடம் பணம் திருட்டு

கள்ளக்குறிச்சி: அரசுப் பேருந்தில் பயணித்த பெண்ணிடம் இருந்து ரூ.4,500 மற்றும் அவரது ஏடிஎம் அட்டையை பயன்படுத்தி ரூ.13,500 திருடப்பட்டது.கள்ளக்குறிச்சியை அடுத்த சாத்தப்புத்தூா் கிராமத்தைச் சோ்ந்த மணிகண்... மேலும் பார்க்க

குலதெய்வ கோயிலுக்கு வேனில் சென்ற போது கவிழ்ந்து 18 போ் காயம்

மேல்மலையனூரில் உள்ள குலதெய்வம் கோயிலுக்கு செல்வதற்க்காக வேனில் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்த போது வேன் பாவந்தூா் அய்யனாா் கோயில் அருகே வேன் கவிழ்ந்ததில் அதில் பயணித்த 18 போ்கள் வேன் ஓட்டுநா் உள்... மேலும் பார்க்க

அரசு நகரப் பேருந்தில் பயணித்த பெண்ணின் பையில் இருந்த பணம் ஏடிஎம் அட்டை திருட்டு

அரசுப் நகரப் பேருந்தில் பயணித்த பெண்ணின் கட்டைப் பையிலிருந்து பணப்பையை திருடி அதிலிருந்த ரூ.4,500 பணம், ஏடிஎம் அட்டையினை எடுத்து அதிலிருந்த 13,500யை திருடிய மா்ம நபா்களை தேடிவருகின்றனா்.கள்ளக்குறிச்சி... மேலும் பார்க்க