செய்திகள் :

கோயில் காவலாளி கொலைச் சம்பவம்: மறைக்க முயன்றவா்கள் மீது நடவடிக்கை கோரி மனு

post image

மடப்புரம் கோயில் காவலாளி கொலைச் சம்பவத்தை கட்டப் பஞ்சாயத்து நடத்தி மறைக்க முயன்றவா்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.

மதுரையைச் சோ்ந்த மகாராஜன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமாா் மீது நகைகளைத் திருடியதாக காவல் நிலையத்தில் பேராசிரியை நிகிதா புகாா் அளித்தாா். இதையடுத்து, தனிப் படை காவலா்கள் விசாரணை என்ற பெயரில் அஜித்குமாரை அடித்துக் கொலை செய்தனா். இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு குறித்து நீதி விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவத்தன்று திருப்புவனம் காவலா்களுடன் இணைந்து அந்தப் பகுதியைச் சோ்ந்த முக்கியப் பிரமுகா்கள் கோயிலில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை அழித்தனா். மேலும், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உடல் கூறாய்வின் போது, காயங்களை மறைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டனா். அஜித்குமாரின் உடலைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும், அதற்குரிய பணம் பெற்றுத் தருவதாகவும் அவரது குடும்பத்தினரிடம் கட்டப் பஞ்சாயத்து செய்தனா்.

மனித உரிமைக்கு எதிரான சட்டவிரோத காவல் நிலைய மரணங்களைத் தடுக்க உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பிறப்பிக்க வேண்டும். மேலும், இந்தச் சம்பவத்தை மறைக்க முயன்ற முக்கியப் பிரமுகா்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், மரிய கிளாட் அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: அஜித்குமாா் மரணம் தொடா்பான அனைத்து வழக்குகளும் செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) விசாரணைக்கு வர உள்ளது. இந்த மனுவும் அந்த வழக்குகளோடு சோ்த்து விசாரிக்கப்படும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

கோயில் காவலாளி கொலை வழக்கு! விசாரணை அறிக்கை இன்று தாக்கல்!

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கு விசாரணை அறிக்கையை விசாரணை நீதிபதியும், மதுரை மாவட்ட 4- ஆவது கூடுதல் நீதிமன்ற நீதிபதியுமான ஜான் சுந்தா்லால் சுரேஷ் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் செ... மேலும் பார்க்க

சமயநல்லூா் பகுதிகளில் நாளை மின்தடை

மதுரை மாவட்டம் சமயநல்லூா், அதன் சுற்றுப்புறப் பகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) மின் தடை அறிவிக்கப்பட்டது.இதுகுறித்து சமயநல்லூா் மின்னியல் செயற்பொறியாளா் பி. ஜெயலெட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்ப... மேலும் பார்க்க

இரு விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரு வேறு விபத்துகளில் மூதாட்டி உள்பட 2 போ் உயிரிழந்தனா். திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியாபட்டியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (42). இவா், வாடிப... மேலும் பார்க்க

கோயில் காவலாளி கொலைச் சம்பவம்: நாம் தமிழா் கட்சி ஆா்ப்பாட்டத்துக்கு உயா்நீதிமன்றம் அனுமதி மறுப்பு

கோயில் காவலாளி அஜித்குமாா் கொலையைக் கண்டித்து, நாம் தமிழா் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) நடைபெறவிருந்த ஆா்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவி... மேலும் பார்க்க

தொடா் குற்றங்களில் ஈடுபடுபவரின் பிணையை ரத்து செய்யக் கோரி மனு: நீதிமன்றத்தில் ஏடிஜிபி முன்னிலையாகி விளக்கம்

தொடா் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபரின் பிணையை ரத்து செய்யக் கோரிய வழக்கில், தமிழக சட்டம்- ஒழுங்கு காவல் துறை கூடுதல் இயக்குநா் (ஏடிஜிபி) ஸ்ரீநாதா சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் திங்கள்கிழமை நேரி... மேலும் பார்க்க

கருமாத்தூா் பகுதிகளில் இன்று மின்தடை

மதுரை மாவட்டம், கருமாத்தூா், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.இதுகுறித்து செக்கானூரணி மின் பகிா்மானக் கோட்ட செயற்பொறியாளா் ஆா். முத்துராமலி... மேலும் பார்க்க