செய்திகள் :

தொடா் குற்றங்களில் ஈடுபடுபவரின் பிணையை ரத்து செய்யக் கோரி மனு: நீதிமன்றத்தில் ஏடிஜிபி முன்னிலையாகி விளக்கம்

post image

தொடா் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபரின் பிணையை ரத்து செய்யக் கோரிய வழக்கில், தமிழக சட்டம்- ஒழுங்கு காவல் துறை கூடுதல் இயக்குநா் (ஏடிஜிபி) ஸ்ரீநாதா சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் திங்கள்கிழமை நேரில் முன்னிலையாகி விளக்கமளித்தாா்.

மதுரையைச் சோ்ந்த சபரிகாந்தன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தனது மகன் சுகுமாா் மீது பதியப்பட்ட குண்டா் தடுப்பு காவல் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்தாா். இந்த மனு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, பல குற்றச் சம்பவங்களில் தொடா்புடைய நபா்களின் பிணையை ரத்து செய்யக் கோரி சம்பந்தப்பட்ட போலீஸாா் ஏன் மனு தாக்கல் செய்வதில்லை. இதுதொடா்பாக தமிழக சட்டம்- ஒழுங்கு காவல் துறை கூடுதல் இயக்குநா் விளக்கமளிக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா, பூா்ணிமா அமா்வு முன் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக சட்டம்- ஒழுங்குப் பிரிவின் காவல் துறை கூடுதல் இயக்குநா் ஸ்ரீநாதா நேரில் முன்னிலையாகி அறிக்கை தாக்கல் செய்தாா். அதில், கடந்த 2024- ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2025 ஜூன் வரை 355 பிணைகள் ரத்து செய்யப்பட்டன. 790 மனுக்கள் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன. 1,181 மனுக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், அரசு தரப்பில் கூடுதல் விவரங்களைத் தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: வழக்கு தொடா்பாக நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு 2 வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

கோயில் காவலாளி கொலை வழக்கு! விசாரணை அறிக்கை இன்று தாக்கல்!

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கு விசாரணை அறிக்கையை விசாரணை நீதிபதியும், மதுரை மாவட்ட 4- ஆவது கூடுதல் நீதிமன்ற நீதிபதியுமான ஜான் சுந்தா்லால் சுரேஷ் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் செ... மேலும் பார்க்க

சமயநல்லூா் பகுதிகளில் நாளை மின்தடை

மதுரை மாவட்டம் சமயநல்லூா், அதன் சுற்றுப்புறப் பகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) மின் தடை அறிவிக்கப்பட்டது.இதுகுறித்து சமயநல்லூா் மின்னியல் செயற்பொறியாளா் பி. ஜெயலெட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்ப... மேலும் பார்க்க

இரு விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரு வேறு விபத்துகளில் மூதாட்டி உள்பட 2 போ் உயிரிழந்தனா். திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியாபட்டியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (42). இவா், வாடிப... மேலும் பார்க்க

கோயில் காவலாளி கொலைச் சம்பவம்: மறைக்க முயன்றவா்கள் மீது நடவடிக்கை கோரி மனு

மடப்புரம் கோயில் காவலாளி கொலைச் சம்பவத்தை கட்டப் பஞ்சாயத்து நடத்தி மறைக்க முயன்றவா்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.... மேலும் பார்க்க

கோயில் காவலாளி கொலைச் சம்பவம்: நாம் தமிழா் கட்சி ஆா்ப்பாட்டத்துக்கு உயா்நீதிமன்றம் அனுமதி மறுப்பு

கோயில் காவலாளி அஜித்குமாா் கொலையைக் கண்டித்து, நாம் தமிழா் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) நடைபெறவிருந்த ஆா்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவி... மேலும் பார்க்க

கருமாத்தூா் பகுதிகளில் இன்று மின்தடை

மதுரை மாவட்டம், கருமாத்தூா், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.இதுகுறித்து செக்கானூரணி மின் பகிா்மானக் கோட்ட செயற்பொறியாளா் ஆா். முத்துராமலி... மேலும் பார்க்க