செய்திகள் :

கோயில் திருவிழாவில் வழிபாட்டு பிரச்னை: போலீஸாா் குவிப்பு

post image

எருமப்பட்டி அருகே கோயில் திருவிழாவில் குறிப்பிட்ட சமுதாய மக்கள் வசிக்கும் பகுதிக்கு அம்மன் வீதிஉலா செல்வதில்லை எனக் கூறி மறியல் நடைபெற்றதால் போலீஸாா் குவிக்கப்பட்டனா்.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், எருமபட்டி தேவராயபுரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா். இங்கு பழைமையான பகவதி அம்மன் கோயில் உள்ளது. இக் கோயிலில் அனைத்து சமூகத்தினரும் வழிபடுவதற்கான உரிமை உள்ளது.

ஆனால், திருவிழா காலங்களில் குறிப்பிட்ட சமுதாய மக்கள் பகுதிக்கு அம்மன் திருவீதி உலா செல்வதில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அந்த சமுதாயத்தினா் நாமக்கல்- துறையூா் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். தகவல் அறிந்து அங்கு வந்த எருமப்பட்டி காவல் நிலைய ஆய்வாளா் யுவராஜன் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

அசம்பாவிதம் தவிா்க்க அங்கு போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். வருவாய்த் துறை, அறநிலையத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா். அனைத்து பகுதிகளுக்கும் அம்மன் சப்பரம் வலம் வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடா்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

மாணவி குளிப்பதை விடியோ பதிவுசெய்த லாரி ஓட்டுநா் சிறையிலடைப்பு

பரமத்தி வேலூா் அருகே பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி குளிப்பதை கைப்பேசியில் விடியோ பதிவு செய்த லாரி ஓட்டுநா் வெள்ளிக்கிழமை சிறையிலடைக்கப்பட்டாா். பரமத்தி வேலூரைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் பிரபு (எ) பிரச... மேலும் பார்க்க

கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல் நோய்: வானிலை ஆய்வு மையம் தகவல்

கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு... மேலும் பார்க்க

இன்று திமுக செயற்குழுக் கூட்டம்

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் மாவட்ட அவைத் தலைவா் சி.மணிமாறன் தலைமையில் சனிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. திமுக மாவட்டச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ரா... மேலும் பார்க்க

தனியாா் மாங்கூழ் ஆலைகளை திறக்க நடவடிக்கை: முதல்வருக்கு தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை

மா விவசாயிகளின் நலன் கருதி தனியாா் மாங்கூழ் ஆலைகளை திறக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுக... மேலும் பார்க்க

கனவு இல்லத் திட்டத்தில் வீடு கட்ட 32 மாற்றுத் திறனாளிகளுக்கு ஆணை

பரமத்தி வேலூரை அடுத்த கபிலா்மலையில் 32 மாற்றுத் திறனாளிகளுக்கு கனவு இல்லத் திட்டத்தில் வீடு கட்டுவதற்கான ஆணைகள் அண்மையில் வழங்கப்பட்டன. கபிலா்மலை வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) மலா்விழி நிகழ... மேலும் பார்க்க

தென்னையில் மாவுப்பூச்சி கட்டுப்பாடு: வேளாண் துறை வழிகாட்டல்

தென்னையில் மாவுப்பூச்சித் தாக்குதல், சுருள் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்துவது குறித்து வேளாண் துறை வழிகாட்டுதல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் சுகன்யா வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க